பக்கம் எண் :

114பால காண்டம்  

விட்டவை.

விட்டவையாம்:      தானக்கை:   தானம்   தரும்  கை.   தானம்
வழங்குவதற்கு  முன்.  நீர்  வார்த்தல்  மரபு. தயரதன் வார்த்த  நீரால்
நனையாத  கைகளே  இல்லை என்கிறார்  கவி.  இது.   பிறிதினவிற்சி
யணியாம்.                                                3
 

171.தாய் ஒக்கும் அன்பின்; தவம் ஒக்கும் நலம் பயப்பின்;
சேய் ஒக்கும். முன் நின்று ஒரு செல் கதி உய்க்கும் நீரால்;
நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும்; நுணங்கு கேள்வி
ஆயப் புகுங்கால். அறிவு ஒக்கும்;- எவர்க்கும் அன்னான்.

 

அன்னான் -  மன்னர்  மன்னனான   அத்தயரதன்; எவர்க்கும்-
தனது    ஆட்சிக் கடங்கியகுடிமக்கள்   எவர்க்கும்;   அன்பின்தாய்
ஒக்கும்
-அன்பு  செலுத்துவதில் பெற்ற தாயை ஒப்பவனாவான்;  நலம்
பயப்பின்   தவம்  ஒக்கும் 
-  நன்மை   செய்வதில்   தவத்தைப்
போன்றவனாவான்;  முன்நின்று  ஒரு  செல்கதி உய்க்கும் நீரான்-
தாய்தந்தையரின்      கடைசிக்     காலத்தில்     முன்னே   நின்று.
இறுதிச்சடங்குகளைச்  செய்து அவர்களை  நற்கதியில்  சேரச் செய்யும்
தன்மையினால்;  சேய்    ஒக்கும்  -   அவர்கள்   பெற்ற  மகனை
ஒத்திருப்பான்;    நோய்    ஒக்கும்என்னின்   -   குடிமக்களுக்கு 
நோய்வருமாயின்;  மருந்து ஒக்கும் - அதைப் போக்கி. குணப்படுத்தும்
மருந்து   போன்றவனுமாவான்; நுணங்கு கேள்வி  ஆயப்புகுந்தால்-
நுணுக்கமான  கல்வித்துறைகளை   ஆராயப்புகும்     போது;  அறிவு
ஒக்கும்
- நுட்பமான பொருளைக் காணும் அறிவினையும் ஒத்திருப்பான்.

தாயன்பு  சிறந்தது. “தாயினும் சாலப்பரிந்து” என. இறையன்புக்கே
தாயன்பை உவமையாக கூறினர் மேலோர். தனது  குடிமக்களிடம்  தாய்
போல்   அன்புடையவன்.   நன்மை  புரிவதில்   தவம்   போன்றவன்;
நற்கதியடையச்  செய்வதில்  சேய்  போன்றவன்;   நோயுறும்  காலை.
அதைப்   போக்கும்  மருந்து  போன்றவன்;  ஆராய்ச்சிக்கு   உதவும்
அறிவு    போன்றவன்   என்றெல்லாம்    தயரதனுடைய   பண்பைச்
சிறப்பித்துக்     கூறுகிறார்.     குருகுமாரனான      சிரவணனுடைய
பெற்றோர்களுக்கு    இறுதிச்   சடங்குகளைச்    செய்து-அவர்களைச்
செல்கதி  உய்த்த செயல் இவனது. “சேயொக்கும்”  என்பது சிறப்பாகப்
பொருந்துவதொன்றுதானே!     ‘அறிவு’      குணவாகு     பெயராய்
அறிவுடையானை உணர்த்தி நின்றது.                          4
 

172.ஈந்தே கடந்தான். இரப்போர் கடல்; எண் இல் நுண் நூல்
ஆய்ந்தே கடந்தான். அறிவு என்னும் அளக்கர்; வாளால்
காய்ந்தே கடந்தான். பகை வேலை; கருத்து முற்றத்
தேய்ந்தே கடந்தான். திருவின் தொடர் போக பௌவம்.