பக்கம் எண் :

  திரு அவதாரப் படலம்197

போதும்    வரும் போதும்  எதிர்ப்படும்  நாட்டு மக்கள் எல்லோரும்.
களியால் - (இராம பிரானையும்  தம்பியரையும் கண்ட) களிப்பில்; கார்
வர அலர் பயி்ர் பொருவுவர்
-மழை வர. மகிழும் பயிர்களை ஒத்துக்
காணப்படுவர்.

கார்:   மேகம் (மழையைக் குறித்தது). வெறிபொழில்: மணம் கமழும்
சோலை.  ஈரமொடு  உரைதரு:   அன்போடு பேசுகின்ற. ஈரம்: அன்பு.
முனிவரர்: (வசிட்டனை ஒத்த). முனிவர்கள் ‘’சோர் பொழுது துறுகுவர்’’
என்றதால் காலையில் சென்று என உரை கூறப்பட்டது.  சோர்பொழுது:
வெயில்  சோரும்.  பொழுது.  துறுகுதல்:  சேர்தல்  எதிர்வார்: எதிரில்
வருபவர்கள்.   மழைமேகம்   கண்டு  பயிர்கள்   மகிழ்வது   இயல்பு.
மேகவண்ணனான  ராமனைக்  கண்டு  மக்கள் மகிழ்ந்தனர்  என்கிறார்
என்பது     எத்துணை    பொருந்தும்.    முனிவர்கள்     தம்மைக்
காணவருவோரிடமும்.  பாடம்  கேட்கும்  மாணவரிடமும்  அன்போடு
உரையாடும்  பண்பினர்  என்பதால்  ‘’’ ஈரமொடுவரை தரு’’ என்றார்.
பொருவுதல்: ஒப்பாதல்.

அரசிளங்குமரர் நால்வரும் நாள்தோறும் காலையிலே அந்நகருக்குப்
புறத்தே  உள்ள  சோலைகளில்  வாழும்  முனிவர்களிடம்  சென்று -
உரையாடி  -  நுண்ணிய  நூற்பொருள் கேட்டு  மாலையில் நகருக்குத்
திரும்புவர்.  எதிர்ப்படும்  மக்களெல்லாம் மழைவரக் கண்டு  தழைதரு
பயிர் போல. இவர்களைக் கண்டு மகிழ்வர் என்பது கருத்து.       129
 

309.ஏழையர் அனைவரும். இவர் தட முலை தோய்
கேழ் கிளர் மதுகையர். கிளைகளும். ‘இளையார்
வாழிய!’ என. அவர் மனன் உறு கடவுள்.
தாழ்குவர் - கவுசலை தயரதன் எனவே.

 

ஏழையர்    அனைவரும் -   அயோத்தி  நகரத்தில்  வாழும்
பெண்களும்;   இவர்தட முலைதோய்   கேழ்கிளர்   மதுகையர் -
அப்பெண்களின்  தனங்களைத்  தழுவி  வாழும் வலிமை  மிக்கவரான
அவர்களது  கணவர்களும்;  கிளைகளும்  -  மற்றும்  அங்கு வாழும்
அவர்களது  உறவினரும்; இளையார் வாழிய என - இச்சிறுவர் நீடூழி
வாழ்வார்   ஆக   என்று   கூறி;   கவுசலை  தயரதன்  எனவே -
கோசலையையும்.   தயரதனையும்  ஒப்ப;  அவர்  மனனுறு  கடவுள்
தாழ்குவர்  
-  தத்தம்  மனம்  பொருந்திய தெய்வங்களை  வணங்கித்
துதிப்பர்.

ஏழையர்:     பெண்கள்  (இவ்வாறு  கூறுவது   கவி  மரபென்பர்).
தோய்தல்:  தழுவுதல்.  கேழ்:  உவமை.  மதுகை: வலிமை.  இளையார்:
இளையவர்    கேழ்கிளர்    என்பதால்    பெண்களைத்     தழுவும்
உரிமையுடைய  ஆடவர்களான கணவன்மார்களைக் குறித்தது.  வாழிய:
வியங்கோல்  வினைமுற்று.  தயரதனது  பட்டத்தரசியர்   மூவருள்ளும்
முதல்   தேவி   என்பதால்   கோசலையைக்   கூறினார்   எனலாம்’’
‘’மறுவிலன்பினின்   வேற்றுமை   மாற்றினாள்’’   என்பறடி    மக்கள்
நால்வரையும்  சமமாகக்  கருதியவள்  என்பதும்  இதனால்  விளங்கும்.
மனன்உறு  கடவுள்.  தத்தம்  குல  தெய்வமுமாம்   அந்த  நகரத்தில்
வாழும்    ஆண்களும்.    பெண்களுமான     அத்தனை    பேரும்
அரசகுமாரர்களின்   நல்வாழ்வுக்குத்   தத்தம்    மனம்   பொருந்திய
தெய்வங்களைத் தொழுது வேண்டினர் என்பது கருத்து.           130