பக்கம் எண் :

198பால காண்டம்  

310.‘கடல் தரு முகில். ஒளிர் கமலம்அது அலரா.
வட வரையுடன் வரு செயல் என. மறையும்
தடவுதல் அறிவு அரு தனி முதலவனும்.
புடை வரும் இளவலும்’ என. நிகர் புகல்வார்.
 

மறையும்   தடவுதல் அறிவரு- வேதமும் தேடி அறிதற்கு அரிய;
தனி  முதல்  அவனும்
-  ஒப்பற்ற  முதல்வனாகிய  ராம  பிரானும்;
புடைவரும்  இளவலும்  
-  அவனுக்குப பக்கம் வரும் இலக்குவனும்;
உடன்வரு  செயல்
-சேர்ந்து வருகின்ற செயலானது; கடல்தரு முகில்
-  கடல்  தந்த  கரிய  மேகமானது; ஒளிர்  கமலம்  அது அலரா -
விளங்கும் தாமரை மலர்கள் அலர; வடவரையுடன் வரு செயல் என-
மேரு  மலையுடன்  வருவது போன்றது என; நிகர் புகல்வார் - (இந்த
இருவரையும் பார்த்தவர்கள்) ஒப்பிட்டுக் கூறுவார்கள்.

கடல்     தரு முகில்:  கடல்  தந்த   கார்மேகம். அலரா: மலர்ந்து.
வடவரை:   வடக்கிலுள்ள   மலை  (மேருமலை)  தடவுதல்:   தேடுதல்.
தனிமுதல்:  ஆதிபகவன்  அவன்:  உலகறி  சுட்டாக  நின்று  பரமனை
உணர்த்தும். புடை:பக்கம்.

‘கமலம்     பூத்த  கரு  முகில்’  இராமனுக்கு  உவமை. ‘வடவரை’
இலக்குவனுக்கு    உவமை.   ‘புகல்வார்’   என்ற    பயனிலைக்கேற்ப
‘கண்டோர்’ எழுவாயாகக் கொள்ளப்பட்டது.                     131
 

311.எதிர் வரும் அவர்களை. எமையுடை இறைவன்.
முதிர் தரு கருணையின் முகமலர் ஒளிரா.
‘எது வினை? இடர் இலை? இனிது நும் மனயையும்?
மதி தரு குமரரும் வலியர்கொல்?’ எனவே.

 

எதிர்   வரும் அவர்களை- தம்மை எதிர்ப்படும் நகர மக்களைப்
பார்த்து;   எமை   உடை   இறைவன்  -  எம்மை  ஆட்கொண்ட
இறைவனாகிய  ராமபிரான்;  முதிர்  தரு  கருணையின் -  முதிர்ந்த
கருணையினால்  (தனது);  முகமலர்  ஒளிரா  - மலர் போன்ற முகம்
ஒளிர;  எதுவினை  -  எம்மால் உங்களுக்கு ஆக வேண்டியதுளதோ?;
இடர்  இலை (கொல்)
- துன்பமெவும் இல்லையன்றோ?; நும்மனையும்
இனிதுகொல்
- உங்கள் மனைவி நலமோ?; மதிதரு குமரரும் வலியர்
கொல்   எனவே   
-  அறிவு   மிக்க   பிள்ளைகள்  வலிமையுடன்
வாழ்கிறார்களா? என்றெல்லாம் கேட்கவே.                     132
 

312.அஃது. ‘ஐய! நினை எமது அரசு என உடையேம்;
இஃது ஒரு பொருள் அல; எமது உயிருடன் ஏழ்
மகிதலம் மழுதையும் உறுக. இ மலரோன்
உகு பகல் அளவு’ என. உரை நனி புகல்வார்.