பக்கம் எண் :

  திரு அவதாரப் படலம்199

அஃது  ஐய- ஐயனே அப்படியே எல்லாம் நலமே; நினை எமது
அரசு  என  உடையேம்
- உன்னை அரசனாக உடைய எங்களுக்கு;
இஃது ஒரு பொருள் அல
-இது ஒரு பொருளாகாது; எமது உயிருடன்
ஏழ் மகிதலம் முழுதும்
-எங்கள் உயிரோடு ஏழு உலகங்கள் எல்லாம்;
மலரோன்  உகுபகல்  அளவு
-(பிரமன் அழிகின்ற காலமான) பிரமப்
பிரளய  காலம்  வரையும்;  உறுக என உரை நனி புகல்வார் -நீயே
ஆட்சி புரிவாயாக என்று மறுமொழி கூறுவார்கள்.

‘அஃது     ஐய’ என்பதற்கு நீ நினைத்தபடியே யாவும்  நன்மையே
என்றனர்  என்பது  பொருள்.  மலரோன்: பிரமன். உகுபகல்:  அழியும்
காலம்.  உரை: சொல்லாகு பெயர். ‘பகல்’ என்ற சிறுபொழுதின்  பெயர்.
பெரும்பொழுதை   உணர்த்தும்.   இராமபிரானை  எதிர்ப்பட்ட   நகர
மக்களை  அவர்கள் நலம் விசாரிப்பதற்கு முன்பே தான்   அவர்களின்
நலம்   கேட்பான்.  அவர்கள்  மகிழ்ந்து  நீ  எங்களுக்கு   அரசனாக
இருக்க.   என்ன   குறைவு  வரும்?  நீடூழி  வாழ  வேண்டும்   என
வாழ்த்துவர் என்பது கருத்து.                                133
 

313.இப் பரிசு. அணி நகர் உறையும் யாவரும்.
மெய்ப் புகழ் புனதைர. இளைய வீரர்கள்
தப்பு அற அடி நிழல் தழுவி ஏத்துற.
முப் பரம் பொருளுக்கு முதல்வன் வைகுறும்.

 
 

இப்பரிசு அணி நகர் உறையும் யாவரும்- இந்த விதமாக அந்த
நகரத்தில் வாழும் எல்லோரும்; மெய்ப்புகழ் புனைதர -உண்மையான
புகழைக்  கூறிக்  கொண்டாடலும்; இளைய வீரர்கள் தப்பு அற அடி
நிழல்  தழுவி  ஏத்துற  
- வீரர்களான  தம்பியர்  மூவரும் ராமனது
திருவடிகளைத்  தவறாது  துதிக்கவும்; முப்பரம் பொருளுக்கு - அரி.
அயன்.  அரன்  எனும்  முக்கடவுளர்க்கும். முதல்வன்  வைகுறும்-
முதல்வனான ராமபிரான் வாழ்வானாயினான்.

பரிசு:     தன்மை.  அணிநகர்.   அழகான   நகரம்  (அயோத்தி).
மெய்ப்புகழ்:  மெய்க்கீர்த்தி. புனைதர: விரித்துக் கூற:  ஏத்துற:  துதித்து
வணங்க.  ‘’மூன்று  கவடாய்  முளைத் தெழுந்த மூலம்’’  ‘முத்தேவரின்
முதற்   பொருள்’  என்று  பின்னும்  கூறுவர்.  பாடல்   எண்  28-ஐ
இப்பாடலுடன்    ஒப்பிடுக.   மூலப்   பரம்பொருள்    இம்மூவரினும்
வேறுபட்டவர் என்பதே கம்பன் கருத்து.                       134