பக்கம் எண் :

  கையடைப் படலம்201

315.நனை வரு கற்பக நாட்டு நல் நகர்
வனை தொழில் மதி மிகு மயற்கும் சிந்தையால்
நினையவும் அரியது. விசும்பின் நீண்டது. ஓர்
புனை மணி மண்டபம் பொலிய எய்தினான்.

 

நனைவரு  கற்பக நாட்டு நன்னகர்  -   அரும்புகள்  விரிகின்ற
கற்பக மரத்தை  உடைய அமரர்கள் நாட்டு நல்ல  நகரான  அமராவதி
நகரை; வனைதொழில்   மதிமிகும்  மயற்கும் - படைத்த  தொழில்
திறமும். அறிவும்   மிகுந்த  மயனுக்கும்;  சிந்தையால்   நினையவும்
அரியது
-  மனத்தால்  எண்ணிப்  பார்க்கவும் இயலாததும்; விசும்பின்
நீண்டது ஓர்
- வான மளவும் உயர்ந்திருப்பதுமாகிய ஒரு;  புனைமணி
மண்டபம்
- மணிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள மண்டபம்:  பொலிய
எய்தினான்
- விளக்கமுறும்படி சேர்ந்தான்.

முந்திய  பாடலில்  குறிப்பிட்ட  ‘அரசர்தம்  பெருமகன்’ என்பதே
இங்குக்  கூறப்பட்ட  ‘எய்தினான்’  என்பதற்கு  எழுவாயாகும். நனை:
அரும்பு.  நல்+நகர்:  நன்னகர்  இங்கு  நன்மை  என்பது  புண்ணியம்
எனும்  பொருளின் வழங்குகிறது. மண்டபம்: அரசிருக்கை.  பொலிதல்:
சிறத்தல். மயன்: தெய்வத்தச்சன்.

அமரர்கள்   நாடான  விண்ணுலகுக்குத்   தலைநகர்  அமராவதி.
அதனைப்   படைத்த   மயனுக்கும்    நினைத்துப்   பார்க்கமுடியாத
சிறப்புடைய   மண்டபம்  என்பது   கருத்து.  ‘மயன்  வனைதொழில்’
மதிமிகும்  மயன்  என்று சிறப்பிக்கப்படுகிறான்.  மண்டபம் மன்னனது
வருகையால்   பொலிந்தது   என்பது   கருத்து.   வனை   தொழில்:
வினைத்தொகை இப்பாட்டு உயர்வு நவிற்சியணியாகும்.            2
 

316.

தூய மெல் அரியணைப் பொலிந்து
   தோன்றினான்;
சேய் இரு விசும்பிடைத்
   திரியும் சாரணர்.
‘நாயகன் இவன்கொல்?’ என்று
   அயிர்த்து. நாட்டம் ஓர்
ஆயிரம் இல்லை என்று
   ஐயம் நீங்கினார்.

 

சேய்இரு விசும்பிடை - உயர்ந்த பெரிய வானத்திடத்தே; திரியும்
சாரணர்
 -  (நிகழ்ச்சிகளை  ஆராய்ந்தறியத்  திரியும் தேவதூதர்கள்;
நாயகன்  இவன்கொல்  என்று  அயிர்த்து  -  நமது தலைவனான
இந்திரன்    இவந்தானோ  என்று  தயரதனைக்  கண்டு  சந்தேகித்து;
நாட்டம்  ஓர் ஆயிரம்  இல்லை  என்று  -  கண்கள்  ஓராயிரம்.
காணப்படவில்லை  என்றெண்ணி;  ஐயம்  நீங்கினார்  -  அவர்கள்
கொண்ட   சந்தேகம்   நீங்கினாராக;  தூயமெல்  அரி  அணை -
தூய்மையும்  மென்மையும்   உடைய  சிங்காதனத்திலே;  பொலிந்து
தோன்றினான்
 - பொலிவுற்று விளங்கினான்.