பக்கம் எண் :

  கையடைப் படலம்203

முனி  வந்து எய்துதலும் - விசுவாமித்திர முனிவன் மண்டபத்தை
அடைந்ததும்; மார்பில் அணி ஆரம் - (தயரதன்) மார்பில்  அணிந்த
மணிமாலை; அந்தர தலத்து இரவி -வானத்திலே ஒளிரும்  சூரியனும்;
அஞ்ச  ஒளி  விஞ்ச - தோல்வியுறும்படி ஒளி மிகுந்திருக்க;  கந்தம்
மலரில்  கடவுள் தன்
-  மணம்  மிகுந்த  தாமரை மலரில்  வாழும்
பிரமனுடைய; வரவுகாணும்  இந்திரன்  என -  வரவினைக்   கண்ட
இந்திரனைப்  போல; கடிது  எழுந்து  அடிபணிந்தான் -  விரைவில்
எழுந்து முனிவனது திருவடிகளை வணங்கினான்.

எய்துதல்:   அடைதல்.  ஆரம்:  மாலை   அந்தரதலம்: ஆகாயம்.
அஞ்ச:  தோல்வியுற  (அஞ்சல்:தோல்வி)   விஞ்சல்:  மிகுதல். கந்தம்:
மணம்.    கடிது:    விரைந்து   முந்திய   பாடல்களில்   தயரதனை
இந்திரனுக்கும்.     விசுவாமித்திரனைப்     பிரமனுக்கும்     ஒப்பக்
கூறியதற்கேற்ப.   இப்பாடலில்.  ‘’பிரமன்  வரவைக்  கண்டு.  எழுந்து
அடிபணியும்  இந்திரனைப்  போல  முனிவரது  வரவுணர்ந்த மன்னன்
எழுந்து    அடிபணிந்தான்’’    என்று    முடித்துக்    கூறியதனைக்
காண்கிறோம். இது முதல் மூன்று பாடல்கள் சந்த விருத்தங்கள்.     5
 

319.பணிந்து. மணி செற்றுபு குயிற்றி
   அவிர் பைம் பொன்
அணிந்த தவிசு இட்டு. இனிது
   அருத்தியொடு இருத்தி.
இணைந்த கமலச் சரண் அருச்சனை
   செய்து. ‘இன்றே
துணிந்தது. என் வினைத் தொடர்’
   எனத் தொழுது சொல்லும்.

 

பணிந்து  - (தயரத மன்னன் முனிவனை) வணங்கி; மணி செற்றுபு
குயிற்றி அவிர் பைம்பொன் அணிந்த தவிசு இட்டு அருத்தியொடு
இனிது  இருத்தி
- மணிகள் நெருங்கப் பதித்து விளங்கும் பொன்னால்
அலங்கரிக்கப்பட்ட   ஆசனமிட்டு   (அதில்)   மிக்க   ஆர்வத்துடன்
முனிவனை   இனிதே  இருக்கச்  செய்து: இணைந்த  கமலச்  சரண்
அருச்சனை   செய்து
 -  தாமரை  போன்ற  இரு   பாதங்களையும்
அருச்சித்து: என்  வினைத்  தொடர்பு - எனது  வினைப்பயன்களின்
தொடர்பு;  இன்றே  துணிந்தது  என  -  இன்றே  நீங்கியது   என்று;
தொழுது சொல்லும் -அம்முனிவனை வணங்கிக் கூறலானான்.

செற்றுபு:  நெருங்க. குயிற்று: பதித்து. பைம்பொன். (பண்புத்தொகை);
பசுமையான  பொன்.  தவிசு:  இருக்கை.  அருத்தி:    ஆசை. சரணம்:
பாதம்.   அருச்சனை:   பூசனை.   வினைத்தொடர்பு:    வினைப்பயன்
இருத்தி:  பிறவினை.  இருவினைப்  பலன்களும் ‘ஆம்’   நல்வினையும்
பிறவிக்  காரணம்  என்பதால்  ‘  இருள்  சேர்   இருவினை’ என்றார்
திருவள்ளுவரும்.   பெரியோர்  வருகையால்  வினைத்    தொடர்புகள்
நீங்கும் என்பது கருத்து.                                      6