பக்கம் எண் :

276பால காண்டம்  

அரக்கர்கள்  சினம்  கொண்டு   வீசிய படைக்கலங்கள் - பருவகால
மழை  போல. அந்தக் காட்டையே   மூடிவிட்டன. வேள்விச் சாலையை
முற்றுகையிட்டுச் சுற்றி வளைத்துக்   கொண்ட அசுரசேனை அலைகளை
உடைய  கடலே மேலெழுந்து -  வானத்தை மூடிக் கொண்டது  போலக்
காணப்பட்டது.                                            44
   

438.வில்லொடு மின்னு. வாள் மிடைந்து உலாவிட.
பல் இயம் கடிப்பினில் இடிக்கும் பல் படை.
‘ஒல்’ என உரறிய ஊழிப் பேர்ச்சியுள்
வல்லை வந்து எழுந்தது ஓர் மழையும் போன்றதே.

 
  

மின்னும் வாள் வில்லொடு மிடைந்து உலாவிட  -   மின்னுகின்ற
வாட்கள்  விற்களுடன்  கலந்து  பெயர்ந்துவர;  கடிப்பினில் பல்இயம்
இடிக்கும்  
-  குறுந்தடிகளால்  பலவகை  வாத்தியங்களை    அடித்துக்
கொண்டு  வரும்; பல்படை ஒல் என உரறிய - பலவிதமான படைகள்
‘ஒல்’  என்று  ஒலித்தன;  ஊழிப்  பேர்ச்சியுள்  - (இச் செயல்) யுகம்
முடியும்  காலத்தில்;  வல்லை  வந்து எழுந்ததோர் - உலகை முடிக்க.
விரைந்து  எழுந்து  வந்த  ஒரு;  மழையும்  போன்றது -  பெருமழை
போலவும் காணப்பட்டது.  

மின்னுவாள்:  வினைத்தொகை.  மின்னு: உகரம் சாரியை. வில். வாள்
என்பன  ஒளி  என்னும் பொருள் கொண்டனவாம்.  ஒல்:  ஒலிக்குறிப்பு.
உலாவுதல்:  பெயர்தல்.  உரறிய: ஒலித்த. ஊழிப்பேர்ச்சி:  யுகம்  முடிவு.
வல்லை:  விரைவு.  ஓர்: ஒப்பற்ற. ‘மழையும்’ இதில்  உம்மை.  இறந்தது
தழிஇய எச்ச உம்மை. வந்தெழுந்தது:  எழுந்து  வந்தது  (சொல் மாற்று).
வில்லும்.  வாளும்  உலாவ.  பலவகை   வாத்தியங்கள்  ஒலிக்க  வந்த
படைகள் - ஒலித்த ஒலியால் ஊழிப்  பெருங்காலத்தில்  விரைந்து வந்த
மேகம்  போலவும்  இருந்தது  என்பது  கருத்து.  அரக்கர்  சேனையின்
போர்த்திறம் மூன்று செய்யுள்களால் கூறப்பட்டதாம்.              45
   

439.கருவடை எயிற்றினர்; கடித்த வாயினர்;
துவர் நிறப் பங்கியர்; சுழல் கண் தீயினர்;
‘பவர் சடை அந்தணன் பணித்த தீயவர்
இவர்’ என. இலக்குவதற்கு இராமன் காட்டினான்.

 
  

கவர் உடை எயிற்றினர்- பிளவுப்பட்ட பற்களை உடையவர்களும்;
கடித்த   வாயினர்   
-   பற்களால்   உதட்டைக்   கடித்த   வாயை
உடையவர்களும்;  துவர் நிறப்பங்கியர் - பவளம் போன்ற நிறமுடைய
தலை  மயிரை  உடையவர்களும்;  சுழல்கண்  தீயினர்  - சுழலுகின்ற
கண்களிலே   தீயை  உடையவர்களும்  ஆகிய இவர்களே; பவர் சடை
அந்தணன்  
-   செறிந்த  சடை  முடியை  உடைய விசுவாமித்திரரின்;
பணித்த  தீயவர்  இவர்  
-  சொன்ன கொடிய அரக்கர்களாகும்; என
இலக்குவனுக்கு  இராமன்   காட்டினான்  
-  என்று  இலக்குவனுக்கு
இராமன் சுட்டிக் காட்டினான்.