பக்கம் எண் :

  வேள்விப் படலம்277

கவர்: பிளவு.  எயிறு:  பல்.  துவர்:  பவளம்.  பங்கி:  மயிர்.  பவர்:
செறிவு                                                   46
 

440.கண்ட அக் குமரனும். கடைக் கண் தீ உக.
விண்தனை நோக்கி. தன் வில்லை நோக்கினான்;
‘அண்டர் நாயக! இனிக் காண்டி. ஈண்டு அவர்
துண்டம் வீழ்வன’ என. தொழுது சொல்லினான்.

 
  

கண்ட  அக்குமரனும் -   இராமபிரான்  காட்டக்  கண்ட  அந்த
இளையவனான  இலக்குவனும்;  கடைக்  கண்ட  தீ  உக  -  கடைக்
கண்களிலே   தீ  சிதறும்படியாக; விண்தனை நோக்கி - வானத்தையும்
பார்த்து;  தன் வில்லை நோக்கினான் - தனது வில்லையும் பார்த்தான்
(பின்பு);   அண்டர்  நாயக  -  (இராமனைப் பார்த்து) தேவர்களுக்குத்
தலைவனே!;  இனி  வீழ்வன  இவர்  துன்டம் - இனி. கீழே வீழ்வது
இவர்களுடைய  உடலின்  துண்டங்களே; ஈண்டு காண்டி - இப்போதே
காண்பாயாக;  என. தொழுது  சொல்லினான்  -  என்று  இராமனை
வணங்கிக் கூறினான்.   

அக்குமரன்:   இளையவன்.  ‘கடைக்கண்’:  கண்கடை சொல் மாற்று.
உக:   கக்க.   அண்டர்:  தேவர்கள்.  துண்டம்:   சிதைந்த   துணுக்கு.
‘வீழ்வன’   வினையாலணையும்  பெயர்.  விண்தனை:   ‘தன்’   அசை
விண்ணை   நோக்கி.  வில்லையும்  நோக்கினான்   என்பது   இராமன்
ஆணையை எதிர்நோக்கி நின்றான் என்க.                       47
   

441.‘தூம வேல் அரக்கர்தம் நிணமும் சோரியும்
ஓம வெங் கனலிடை உகும்’ என்று உன்னி. அத்
தாமரைக் கண்ணனும். சரங்களே கொடு.
கோ முனி இருக்கை. ஓர் கூடம் ஆக்கினான்.

 
  

தூம  வேல்  அரக்கர்  தம்  -   புகை  காலும்   வேலையுடைய
அவ்வரக்கரது;   நிணமும்   சோரியும்   -   சதைத்  துண்டங்களும்
இரத்தமும்; ஓம  வெம் கனல் இடை உகும் - தூய வேள்வித் தீயிலே
சிதறி  விழக்கூடும்;  என்று  உன்னியே  -  என்று  நினைத்தவனாய்;
தாமரைக்  கண்ணனும்  
-  தாமரை மலர் போன்ற கண்களை  உடைய
இராபிரான்;  சரங்களே  கொடு  -  தனது  அம்புகளைக்  கொண்டே;
கோமுனி   இருக்கை  
-  அரச  முனிவனான  விசுவாமித்திரனுடைய
இருப்பிடத்தை;  ஓர்  கூடம் ஆக்கினான் - ஒரு கூடாராமாகக் செய்து
விட்டான்.  

தூமம்:   புகை. நிணம்: உடற்சதை. சோரி: இரத்தம். ஓமம்: வேள்வி.
உன்னி:    நினைத்து.    வெங்கனல்:   பண்புத்தொகை.    இருக்கை:
இருப்பிடம்.   அரக்கரது   நிணமும்.   ரத்தமும்   வேள்வித்   தீயில்
விழாதபடி.  இராமன்  முனிவரது இருக்கையை. அம்புகளாலேயே  ஒரு
கூடாரமாக்கினான் என்பது கருத்து.                           48