பக்கம் எண் :

  வேள்விப் படலம்279

444.திருமகள் நாயகன் தெய்வ வாளிதான்.
வெருவரு தாடகை பயந்த வீரர்கள்
இருவரில் ஒருவனைக் கடலில் இட்டது; அங்கு
ஒருவனை அந்தகபுரத்தின் உய்த்ததே.
 

திருமகள்  நாயகன்  - இலக்குமி கேள்வனாகிய இராமபிரானுடைய;
தெய்வவாளிதான்
-  தெய்வத்தன்மை வாய்ந்த அம்பானது வெரு வரு
தாடகை  பயந்த
  -   மூவுலகும்  அஞ்சும்படியான  தாடகை  பெற்ற;
வீரர்கள்  இருவரில்  
- வீரர்களான சுபாகு. மாரீசன் என்னும் இரண்டு
பேரில்;  ஒருவனைக் கடலில்  இட்டது  -  ஒருவனான  மாரீசனைக்
கடலில்  தள்ளிவிட்டது;  அங்கு  ஒருவனை  -  மற்றவனான  சுபாகு
என்பவனை;  அந்தக புரத்தில்  உய்த்தது  -  எம்புரியில்  கொண்டு
போய்ச் சேர்த்தது.

திருமகள்  நாயகன்  திருமால்:  திருவின்   அவதாரமான  ராமனை
இப்பெயரால்  குறிப்பிட்டார். முன்பும் ‘’திருமாலின்  கேள்வன்  என்றது
நினைவுகூரத் தக்கது. தெய்வ வாளி:  தெய்வத்தன்மை  வாய்ந்த  அம்பு.
அந்தகன்:  எமன்.  புரம்:  ஊர். உய்த்தல்:  செலுத்துதல்.  ராமபிரானது
தெய்வத்தன்மை   வாய்ந்த   அம்பு    தாடகையின்     பிள்ளைகளில்
ஒருவனைக்கடலில்   சேர்த்தது.    மற்றொருவனை    அந்தகனூர்க்குக்
கொண்டு போய்ச் சேர்த்தது என்பது கருத்து.                     51
   

445.துணர்த்த பூந் தொடையலான் பகழி தூவினான்;
கணத்திடை விசும்பினைக் கவித்துத் தூர்த்தலால்.
‘பிணத்திடை நந்து இவர் பிடிப்பர் ஈண்டு’ எனா
உணர்த்தினர். ஒருவர்முன் ஒருவர் ஓடினார்

 
  

துணர்த்த  பூந்தொடையலான்- கொத்தாக விரிந்தமலர்  மாலையை
அணிந்த   ராமபிரான்; பகழி தூவினான் - (மற்றுமுள்ள அரக்கர்களின்
மேல்) அம்புகளை  ஏவினான்;  கணத்திடை  விசும்பினைக் கவித்து-
அவ்வம்புகள்   ஒரு   கணப்போதில்  வானத்தைச்  சூழ்ந்து  கொண்டு;
தூர்த்து  
-  மூடிவிட்டது;   இவர்  பிணத்திடை  நடந்து  -  இந்த
அரசகுமாரர்கள்   பிணங்களின்   மீது   நடந்து   வந்தேனும்;  ஈண்டு
பிடிப்பர்  எனா  இங்கு  
-  நம்மைப் பிடித்துக் கொள்வார்கள் என்று;
உணர்த்தினர்  
- ஒருவருக் கொருவர் தெரிவித்துக்  கொண்டவர்களாய்;
ஒருவர்முன்  ஒருவர்  ஓடினர்
- அந்த அரக்கர்கள் ஒருவருக்கு முன்
மற்றொருவராக ஓடலாயினர்.  

துணர்த்த:   கொத்தாக   விரிந்த.   தொடை: மாலை. பகழி: அம்பு.
கவித்தல்:  சூழுதல்.  தூர்த்தல்: மூடுதல்  அல்லது  மறைத்தல். விசும்பு:
வானம்.  எனா:  என்று.  செயா  என்ற   வாய்பாட்டு   வினையெச்சம்.
உணர்த்தினர்.  -  முற்றெச்சம்.  ராமபிரான்  அம்புகளை  ஏவ  அவை
வானையும்  மறைத்துவிட்டது. அஞ்சிய அரக்கர்கள்  பிணத்தின்  மேல்
நடந்தேனும்   நம்மைப்   பிடித்துவிடுவார்  என   ஒருவருக்கு   முன்
ஒருவராக ஓடலாயினர் என்பது கருத்து.                        52