பக்கம் எண் :

280பால காண்டம்  

446.ஓடின அரக்கரை உருமின் வெங் கணை
கூடின; குநைத் தலை மிறைத்துக் கூத்து நின்று
ஆடின; அலகையும். ஐயன் கீர்த்தியைப்
பாடின; பரந்தன. பறவைப் பந்தரே.
 

ஓடின  அரக்கரை  -  அவ்வாறு  பயந்து   ஓடிய   அரக்கர்களை;
உருமின்  வெங்கணை  
-  அவர்களைக்  கொல்லுமாறு  ராமபிரானால்
ஏவப்பட்ட   கொடிய   அம்புகள்;  கூடின  -உரிய இலக்கைப் போய்ச்
சேர்ந்தன;   குறைத்தலை  -   (அதனால்  அரக்கர்கள்  கொல்லப்பட
அவர்களது  குறையுடல்களான கவந்தங்கள்; மிறைத்து நின்று ஆடின -
விறைத்து   நின்று   ரத்த  வெள்ளத்தில்  ஆடலாயின;  அலகையும் -
பிணங்களை   வாரித்தின்ன    வந்த  பேய்களும்;  ஐயன்கீர்த்தியைப்
பாடின  
-  இராமபிரானது   வெற்றிப்  புகழைப் பாடலாயின; பறவைப்
பந்தர்  பரந்தன  
-  பந்தல்  போலப்  பறவைக்  கூட்டம் வானத்தில்
விரிந்தன.  

உருமு:   இடி.  உருமின் வெங்கணை: இடி போன்ற கொடிய அம்பு.
குறைத்தலை:  தலை  துணிக்கப்பட்ட  முண்டம் (கவந்தம்).  மிறைத்தல்:
விறைத்தல்.  அலகை: பேய்.  ஐயன்:மேலோன்: கீர்த்தி: புகழ்.  பரந்தல்:
விரிதல். பந்தர்: பந்தர் ஈற்றுப் போலி.                         53
   

447.பந்தரைக் கிழித்தன. பரந்த பூ மழை;
அந்தர துந்துமி முகிலின் ஆர்த்தன;
இந்திரன் முதலிய அமரர் ஈண்டினார்.
சுந்தர வில்லியைத் தொழுது வாழ்த்தினார்.

 
  

பரந்த பூ மழை- தேவர்கள் பொழிந்த மலர்; பந்தரைக்  கிழித்தது
-   பறவைக்   கூட்டப்   பந்தலைக் கிழித்துக் கொண்டு கீழே வீழ்ந்தது;
அந்தர துந்துமி  முகிலின்  ஆர்த்தன  
-   வானத்திலிருந்து துந்துமி
வாத்தியங்கள்  மேகங்களைப்  போல  முழங்கின;   இந்திரன் முதலிய
அமரர்  ஈண்டினர்  
-  இந்திரன் முதலான தேவர்கள்  வானவீதியிலே
வந்து  திரண்டனராய்; சுந்தர  வில்லியைத் தொழுது வாழ்த்தினார் -
அழகிய வில்லாளனாகிய ராமனைத் தொழுது வாழ்த்தினார்கள்.  

கிழித்தன:   கிழித்துக்  கொண்டு  கீழே இறங்கின என்பது பொருள்.
பூமழை:  மழை  மிகுதிப்   பொருளைத்   தந்து  நின்றது.  துந்துமி  -
தேவர்கள்  இசைக்கருவி.   ஈண்டுதல்:   கூடுதல்  (திரள்தல்).  சுந்தரம்:
அழகு. வில்லி: வில்லை உடையவன்.  தொழுது:  வணங்கி. வாழ்த்தினர்:
துதித்தனர்:   அரக்கர்களால்   அல்லலுற்ற   தேவர்கள்   அவ்வல்லல்
தீர்ந்தமையால்  மகிழ்ந்து.  ராமனை  வணங்கி   வாழ்த்தினர்  என்பது
கருத்து.                                                  54
 

448.புனித மா தவர் ஆசியின் பூ
   மழை பொழிந்தார்;