பக்கம் எண் :

  வேள்விப் படலம்281

அனைய கானகத்து மரங்களும்
   அலர் மழை சொரிந்த;
முனியும். அவ் வழி வேள்வியை
   முறைமையின் முற்றி.
இனிய சிந்தையன். இராமனுக்கு
   இனையன இசைத்தான்.
 

புனித  மாதவர்-  புனிதமான தவமுனிவர் எல்லோரும்;  ஆசியின்
பூமழை  பொழிந்தார்  
-  ஆசிமொழிகளாகிய மலர்மாரி பொழிந்தனர்;
அனைய  கானகத்து மரங்களும்
- அந்தக் காட்டில் உள்ள பல வகை
மலர்மரங்களும்;  அலர்  மழை  சொரிந்த  - மலர்மழை பொழிந்தன;
அவ்வழி   முனியும்   
-   அப்போது   விசுவாமித்திர   முனிவனும்;
வேள்வியை  முறைமையின்  முற்றி
- வேள்வியை முறைப்படி செய்து
முடித்து;   இனிய  சிந்தையன்  -  மகிழ்ந்த   மனம்  உடையவனாய்;
இராமனுக்கு இனையன இசைத்தான்
- இராமபிரானைப் பார்த்துப் பின்
வருமிவற்றைச் சொல்லலானான்.  

புனிதம்:  தூய்மை.  மாதவர்: சிறந்த முனிவர்கள். ஆசி: ஆசிமொழி.
பொழிதல்:  மிகப்   பொழிதலாம்.  வினை  உருவகம். அனைய: அந்த.
கானகம்+அத்து:   கானகத்து.   இதில்  ‘அத்து’  சாரியை. அலர்: நன்கு
விரிதல்.   முற்றி:    நிறைவேற்றி.    இனிய   சிந்தையன்   என்பதை
இராமனுக்குக்   கூட்டி   உறை    கூறினும்    அமையும்.  இசைத்தல்:
சொல்லுதல்                                               55
   

449.‘பாக்கியம் எனக்கு உளது என
   நினைவுறும் பான்மை
போக்கி. நிற்கு இது பொருள் என
   உணர்கிலென் - புவனம்
ஆக்கி. மற்றவை அனைத்தையும்
   அணி வயிற்று அடக்கி.
காக்கும் நீ. ஒரு வேள்வி
   காத்தனை எனும் கருத்தே.’
 
  

புவனம்- அனைத்துள உலகங்களை; ஆக்கி -  (பிரமனாய் இருந்து)
படைத்தும்;  மற்று  - அதன் பின் (ஊழிப் பெரு வெள்ளக் காலத்தில்);
அவை  அனைத்தையும்  
-  அவ்வுலகத்து.  இயங்கியல்.  நிலையியல்
பொருள்கள்   அனைத்தையும்;   அணிவயிற்று   -   நின்  அழகிய
திருவயிற்றில்;  அடக்கிக் காக்கும்  நீ  - அவை அழிவுறா வண்ணம்
அடக்கிக்கொண்டு   (திருமாலாய்  இருந்து)  காப்பாற்றுவாய்;   அத்தகு
பெருமைக்குரிய  நீ; ஒரு வேள்வி - நான் செய்த இவ் வேள்வியினை;
காத்தனை -
இடையூறு வாராவண்ணம் பாதுகாத்தாய்; எனும் கருத்து -
என்று உலகத்தவர் என்னும் எண்ணத்தால்; பாக்கி