பக்கம் எண் :

  வேள்விப் படலம்283


   

பெரிய காரியம் உள; அவை
   முடிப்பது பின்னர்;
விரியும் வார் புனல் மருதம் சூழ்
   மிதிலையர் கோமான்
புரியும் வேள்வியும். காண்டும் நாம்;
   எழுக! என்று. போனார்.
 

ஐய!  அரிய யான்சொலின்  -  மேலோனே! அரிய செயல்  என்று
நான்  சொல்வேனானால்;  நிற்கு அரியது ஒன்று இல்லை - உனக்குச்
செய்வதற்கு    அரியசெயல்  எதுவுமே  இல்லை  (ஆயினும்);  பெரிய
காரியம்  உள
- அரியபெரிய செயல்களும் உள்ளன; அவை முடிப்பது
பின்னர்  
-  அவற்றைச்  செய்து முடிக்கத் தக்க காலம் பின்னால் வரப்
போகிறது.  (எனவே);    வார்புனல்    விரியும்   -    பெருகிவரும்
நீர்நிறைந்துள்ள;  மருதம் சூழ்மிதிலையர் கோமான் - மருத நிலங்கள்
சூழ்ந்துள்ள    மிதிலை    நாட்டின்   மன்னனான   சனகன்;  புரியும்
வேள்வியும் காண்டும் நாம்
- செய்கின்ற வேள்வி ஒன்றினையும்  நான்
சென்று  பார்ப்போம்;   எழுக  -  எழுந்து  என்னுடன்  வருவீர்களாக;
என்று போனார்
- (என்று கூறி அழைத்தேக) மூவரும் சென்றனர்.  

சொலின்:   சொல்லியன்  என்பது தொகுக்கப்பட்டது ‘ஐ’ என்பதற்கு
அழகு  என்பதும்  பொருள்.  எனவே  ‘ஐய’   என்பதற்கு  ‘அழகனே’
என்பதும்  பொருந்துவதே.  ஒன்று:  ஒரு   சிறிதும்   எனவும் கூறுவர்.
வார்புனல்: பெருகிவரும் நீர்.                                 58