பக்கம் எண் :

284பால காண்டம்  

9.அகலிகைப் படலம்

படல  விளக்கம்:  கௌதம  முனிவனின்  மனைவியும் சனகனின்
புரோகிதனான   சதானந்த   முனிவனுடைய   தாயுமான   அகலிகை
இந்திரனால்  ஏமாற்றப்  பட்டு  அவனோடு கூடிப் பின்னர்க் கௌதம
முனிவனது    சாபத்தால்   கல்லுருவம்   அடைகிறாள்.   இராமனும்
இலக்குவனும்   விசுவாமித்திரனோடு   மிதிலைக்குச்   செல்லும்போது
இராமனது  திருவடித்  துகள்பட்டுத்  தனது  சாபம் நீங்கி  முன்னைய
பெண் வடிவத்தை அடைந்த வரலாற்றைக் கூறுவது இப் படலம்.  

விசுவாமித்திரன்   முதலான  மூவரும்  சோணை நதியை அடைந்து
சோலையில்  தங்குகின்றார்கள்;  பின்பு   கங்கையைக்  கண்டு மிதிலை
நாடு  சேர்கின்றார்கள்.  அப்பொழுது   அதன் மதிற்புறத்தே கல்லாய்க்
கிடந்த   அகலிகைக்குப்   பெண்ணுருவம்    தருகின்றான்   இராமன்.
வியப்புற்ற  இராமன்  கேட்டதற்கிணங்க   விசுவாமித்திரன்  அகலிகை
வரலாறு  கூறுகின்றான்.  பின்னர்  மூவரும்  அகலிகையைக்  கௌதம
முனிவனிடம் சேர்ப்பித்து மிதிலையின் புறமதிலை அடைகின்றார்கள்.  

விசுவாமித்திரன். இராமன்.  இலக்குவன்  மூவரும்  சோணை நதியை
அடைந்து சோலையில் தங்குதல்.

கலித்துறை
 

452.அலம்பும் மா மணி ஆரத்தோடு
   அகில் அளை புளின
நலம் பெய் பூண்முலை. நாகு இள
   வஞ்சியாம் மருங்குல்.
புலம்பும் மேகலைப் புது மலர்.
   புனை அறல் கூந்தல்.
சிலம்பு சூழும் கால். சோணை ஆம்
   தெரிவையைச் சேர்ந்தார்.

 
  

அலம்பும்  மாமணி  ஆரத்தோடு   -    கழுவப்பட்ட    சிறந்த
இரத்தினங்களும்  சந்தனமும்;  அகில்  அளை  புளினம்  - அகிலும்
(தன்னிடம்) பொருந்திய மணற் குன்றுகளாகிய; நலம் பெய் பூண்