பக்கம் எண் :

286பால காண்டம்  

கொள்பவனைப்போல;  அருணன்  தன்  நயனம் - (தன் சாரதியாகிய)
அருணனுடைய    கண்கள்;   கதிக்கும்   -   விரைந்து  செல்வதைக்
காட்டிலும்;   முந்துறு   கலினம்   மான்   -  முந்திச்  செல்லுகின்ற
கடிவாளத்தைக்   கொண்ட  குதிரைகள்  பூட்டிய;  தேரொடும் - தனது
தேருடன்; கடல் குளித்தான் - மேற்குக் கடலில் மூழ்கினான்.  

தற்குறிப்பேற்ற  அணி:  மேற்கில் கதிரவன் மறைதலை. அவன் தன்
வெம்மையைத்  தணிக்கும்பொருட்டு   மேற்குக்  கடலில்  மூழ்கியதாக
வருணித்தார்.  கதிரவன் முதலான  கிரகங்கள். நட்சத்திரங்கள் மேற்கே
மறைந்து   கிழக்கே  உதிக்கும்.   அதனை  மேற்குக்  கடலில்  மூழ்கி
மறைந்து  கிழக்குக்  கடலில்   மீண்டும் எழுவதாகக் கூறுதல் கவிமரபு.
தேர்ப்பாகனும் குதிரையும்: தேர்ச்  சாரதியின் கண் பார்வை எவ்வளவு
தூரம்  செல்லுமோ  அதைவிட   அதிக  தூரம்  அவனது குதிரைகள்
செல்லும். அருணன்: கதிரவனின் தேர்ப்பாகன்.                   2
   

454.கறங்கு தண் புனல். கடி நெடுந்
   தாளுடைக் கமலத்து
அறம் கொள் நாள்மலர்க் கோயில்கள்
   இதழ்க் கதவு அடைப்ப.
பிறங்கு தாமரைவனம் விட்டு.
   பெடையொடு களி வண்டு
உறங்குகின்றது ஓர் நறு மலர்ச்
   சோலை புக்கு. உறைந்தார்.

 
  

கறங்கு  தண்புனல்- ஒலிக்கின்ற குளிர்ந்த நீர்நிலைகளிலுள்ள;  கடி
நெடுந்தாள்  உடை  
-  மணத்தையும்  நீண்ட தண்டினையும்  உடைய;
நாள் கமலத்து மலர்
- அன்று பூத்த தாமரையின் மலர்களாகிய; அறம்
கொள்  கோயில்கள்  
-  (விருந்தாக  வருகிற வண்டுகளின் தாகம் தீர
அவற்றிற்குத்    தேனைத்   தருதலாகிய)  தருமத்தைக்  கொண்டுள்ள;
சிறந்த   மாளிகைகள்;  இதழ்க்   கதவு   அடைப்ப  தம்முடைய
இதழ்களாகிய   வாயில்   கதவுகளை மூடிவிட்டதனால் (அங்கே  சென்று
மதுவைக் குடித்து மயங்கித் தூங்க முடியாமல்); பிறங்கு தாமரை வனம்
விட்டு  -  
கண்களுக்குக்  கவர்ச்சியாக  விளங்குகின்ற  அத்தாமரைக்
காட்டை   நீங்கி;   களிவண்டு  -  மதுவால்  களிப்படையும்   ஆண்
வண்டுகள்; பெடையொடும்  உறங்குகின்றது  - பெண் வண்டுகளுடன்
சென்று உறங்குவதற்கு  இடமான;  ஓர்  நறுமலர்ச் சோலை - மணம்
பரப்பும்  பூக்களையுடைய ஒரு  சோலைக்குள்ளே;  புக்கு உறைந்தார்-
புகுந்து (அன்றிரவு அம் மூவரும்) தங்கினார்கள்.  

வண்டும்   சோலையும்:  குவிந்த  தாமரைப்  பூக்களின்  தேனைப்
பெறாமையால். வண்டுகள் அம் மலர்களை விட்டுச்   சோலைகளிலுள்ள
பல  வகையான  மலர்களின்  தேனைக்  குடித்து   மயங்கின.  இரக்க
வருகின்றவர்கள்  ஒன்றும் கொடுக்காமல்  கொடையாளிகளின் வீட்டின்
கதவம் அடைத்திருப்பத