பக்கம் எண் :

  அகலிகைப் படலம்287

னால்  வேறு   இடம்  சென்று  அவர்களிடம்  தாம்  விரும்பியதைப்
பெற்று  மகிழ்வார்கள். இந்த உலக இயல்பை அறிந்து இவ்வாறு கம்பர்
வருணித்தார்.  

வான்மிகம்:  முனிவர்  முதலோர் சோணை நதியைக் கடந்தபின் பல
வனங்களையும்    பார்த்தவாறு    கங்கையை    அடைந்தனர்.   அக்
கங்கையின்  வரலாற்றைக்   கேட்டபின்   அதன் வடகரையைக் கடந்து
அங்குள்ள  விசாலை என்னும்  நகரத்தைச்  சேர்ந்தனர். நயம்: தாமரை
மலரில்    தேனைப்    பெறாத     வண்டுகள்   அவற்றை   விட்டுச்
சோலையிலுள்ள  பலவகை  மலர்களை   நாடும்.   தன்  மனைவியிடம்
இன்பம்  பெறாமல்  அவளைவிட்டு  அகலிகையைத்  தேடிச் சென்றான்
இந்திரன் என்பது இங்கு அறியத் தக்கது.                        3

                                          கங்கையைக் காணல்
 

455.காலன் மேனியின் கருகு இருள்
   கடிந்து. உலகு அளிப்பான்
நீல ஆர்கலி. தேரொடு
   நிறை கதிர்க் கடவுள்.
மாலின் மா மணி உந்தியில்
   அயனொடு மலர்ந்த
மூல தாமரை முழு மலர்
   முளைத்தென. முளைத்தான்.

 
  

காலன் மேனியின்- யமனது நிறம்போலக்;  கருகு இருள் கடிந்து-
கறுத்துள்ள   இருட்டை  நீக்கி;  உலகு  அளிப்பான்  -  உலகத்தைக்
காக்கும் பொருட்டு; நிறை கதிர்க் கடவுள் - நிறைந்த கதிர்களையுடைய
கதிரவன்;   தேரொடு  -  தனது  இரதத்தோடு;  நீலம்  ஆர்கலி  -
நீலக்கடலிலே;  மாலின் மாமணி அயனொடு வந்த - திருமாலின் கரிய
அழகிய  உந்தியிலே பிரமனோடு தோன்றிய; மூலத் தாமரை முழுமலர்
முளைத்தென  
-  முதன்மையான  பெரிய  தாமரை மலர்  முளைத்தது
போல; முளைத்தான் - உதித்தான்.  

தற்குறிப்பேற்ற   அணி. கடலுக்குத் திருமால்; அக் கடலில்  கதிரவன்
தோன்றுகிற    உதயமலைக்குத்   திருமாலின்   உந்தி;   கதிரவனுக்கும்
பிரமன்; தேருக்குத் தாமரை மலர் ஆகியவை உவமைகள் ஆயின.    4
 
  

456.அங்கு நின்று எழுந்து.
   அயன் முதல் மூவரும் அனையார்.
செங் கண் ஏற்றவன் செறி சடைப்
   பழுவத்தில் நிறை தேன்
பொங்கு கொன்றை ஈர்த்து ஒழுகலால்.
   பொன்னியைப் பொருவும்