அயன்முதல் மூவரும் அனையார் - (கதிரவன் உதயமானவுடன்) பிரமன் முதலாகிய மும்மூர்த்திகளையும் ஒத்தவராகிய விசுவாமித்திரன் முதலான மூவரும்; அங்கு நின்று எழுந்து - அச்சோலையிலிருந்து புறப்பட்டு; செங்கண் ஏற்றவன் - சிவந்த கண்களைக் கொண்ட காளையை ஊர்தியாகவும் கொடியாகவும் உடைய சிவனது; செறிசடைப் பழுவத்தில் - அடர்ந்த சடையாகிய காட்டிலுள்ள; நிறை தேன் பொங்கு - நிறைந்த தேனொடு விளங்குகின்ற; கொன்றை ஈர்த்து ஒழுகலால் - பொன்னிறமுள்ள கொன்றை மலரை இழுத்துக் கொண்டு பெருகுவதாலே; பொன்னியைப் பொருவும் - (பொன்னி என்னும் பெயரொடு பொன்னைக் கொழிந்து வரும்) காவிரி நதியை ஒத்துள்ள; கங்கை என்னும் - கங்கை என்கிற; அக்கரை பொரு - அந்த இரு கரைகளிலும் மோதுகின்ற; திருநதி கண்டார் - அழகும் மேன்மையும் மிக்க ஆற்றைக் கண்டனர். காவிரி - கங்கை: திருமாலின் பரம பதத்திற்கு அருகிலுள்ள விரசை நதிபோல விளங்குவது காவிரி. இது நிலவுலகில் திருவரங்கத்தின் இரு பக்கங்களிலும் மாலைபோலச் சூழ்ந்துள்ளது. இத்தகைய சிறப்புடைய காவிரி கங்கைக்கு உவமையாயிற்று. அயன் முதல் மூவர்: பிரம்ம ரிஷிப் பட்டத்தை அரிய முயற்சியால் பெற்ற விசுவாமித்திரனுக்குப் பிரமனும். திருமாலின் அவதாரச்சிறப்புடைய இராமனுக்கு வி்ஷ்ணுவும். மிக்க கோபமுள்ள இலக்குவனுக்கு அழிக்குங் கடவுளான உருத்திரனும் உவமையாயினர். 5 மிதிலை நாடு சேரல் |