பக்கம் எண் :

  அகலிகைப் படலம்289

நிழல்   -   சாயையை;  கயல்  எனக்  கருதா - கயல் மீன்களென்று
கருதி;  அள்ளி  -  தம் மூக்கால் குத்தியெடுத்து;  நாணுறும் - (அவை
மீன்களாக  இல்லாமையால்)  வெட்கம் அடைவதற்கு  இடமான;  அகல்
பணை  
- பரப்புடைய மருதநிலம் சூழ்ந்த; மிதிலை நாடு அணைந்தார்
- மிதிலை நாட்டை மூவரும் சேர்ந்தார்கள்.  

மிதிலை   நாடு:   வயல்களில்   உள்ள    பங்கய    மலர்களிலே
அப்பொழுதான்   உறக்கம்   நீங்கிய   நாரைகள்   இன்னும்  தூக்கக்
கலக்கத்தால்  மயங்கியுள்ளன.  வயலில்  களைபறிக்கும்   உழத்தியரின்
கண்  பிரதி பிம்பத்தை அந்த நாரைகள் கயலென்று கருத்திக்  கொத்தி
அவை மீன்கள் அல்ல என்பதை அறிந்து  வெட்கமடைந்து  மறைதற்கு
இடமான   வயல்  நிலத்திற்குச்  சென்றன.   மயக்க  அணி:   மகளிர்
கண்களின்   நிழலைக்   கயல்   மீன்    என்று   கருதி    நாரைகள்
மயங்கினவாகக்   கூறியதால்.  வான்களை:  வயல்களில்   தாமரைகளே
களைகளாக   உள்ளன.   ஒப்புமை:   கண்ணும்   கயலும்:  வடிவமும்
பிறழ்ச்சியும் பற்றிக் கண்ணிற்குக் கயல் உவமையாயிற்று. கம்பன்.41   6

                                       மிதிலையின் வளம்
 
  

458.வரம்பு இல் வான் சிறை மதகுகள்
   முழவு ஒலி வழங்க.
அரும்பு நாள்மலர் அசோகங்கள்
   அலர் விளக்கு எடுப்ப.
நரம்பின் நான்ற தேன் தாரைக் கொள்
   நறு மலர் யாழின்.
சுரும்பு. பாண் செய.
   தோகை நின்று ஆடுவ - சோலை.
 
  

சோலை   -  (அந்த மிதிலைநாட்டுச்) சோலைகளில்; வரம்பு இல் -
அளவில்லாத;  வான்சிறை மதகுகள் - பெரிய நீர் நிலையின் மதகுகள்;
முழவு  ஒலி  வழங்க  
-  மத்தள ஓசையைத் தரவும்; அசோகங்கள் -
அசோக  மரங்கள்;  அரும்பு  நாள்  மலர்  -  அரும்புகின்ற  புதிய
மலர்களாகி; அலர்  விளக்கு  எடுப்ப  -  பொலிவுள்ள  விளக்குகளை
ஏந்தவும்.   நரம்பின்  நான்ற - யாழின்  நரம்பு போல நீண்ட தேன்
தாரை கொள்
- சிறந்த தேனின் ஒழுக்கைக் கொண்ட; நறுமலர் யாழில்
-  நறுமணம்  வீசும்  மலர்களாகிய  யாழிலே;  சுரும்பு பாண் செய -
வண்டுகள்  பாடவும்;  தோகை  நின்று  ஆடுவ  -  மயில்கள் நின்று
கூத்தாடுகின்றன.  

மயிலும்  மகளிரும்: ஆடும் மகளிரின் தன்மை மயில்களுக்கு  ஏற்றிக்
கூறப்பெற்றுள்ளது.  உருகப்  பாங்கு.  சோலைகளின்  மதகுகளில்   நீர்
பாயும்போது  உண்டாகும்  ஒளியை  மத்தள  ஒலியாகவும்.   மலர்களை
விளக்கின்    ஒளிப்பிழம்பாகவும்.     தேன்    தாரைகளை    யாழின்
நரம்பாகவும்.   மலரை   யாழாகவும்.   வண்டுகளைப்    பாடகராகவும்.
மயில்களைக் கூத்தாடும் மகளிராகவும் உருவகப்படுத்தி