கழனி - (அந் நாட்டு) வயல்களில்; பார்ப்பு எனும் தூதால்- தங்கள் பார்வையாகிய தூதால்; எட்ட ஆதரித்து - (தம் கணவரைச்) சேர்வதற்கு விரும்பி; உழல்பவர் - சஞ்சரித்துத் திரிபவராகிய; பட்டம் - நீர்நிலையி்லுள்ள; வாள்நுதல் - ஒளிபொருந்திய நெற்றியையுடைய; மடந்தையர் இதயங்கள் - உழவ மகளிரின் மனம்; கொதிப்ப . வெறுப்பு அடையுமாறு; வயலிடை மள்ளர் - வயல்களிலே உழவர்கள்; வட்ட நாள்மரை மலரின் மேல் - வட்ட வடிவமான புதிய தாமரை மலர்களின்மேல்; கட்ட காவி - களை பறித்தெறிந்த கருங்குவளை மலர்களாகிய; அம்கண் கடை - அழகிய கடைக்கண்களை; காட்டுவ - வெளிப்படுத்துகின்றன. வேறு உரை: உழத்தியரின் பார்வைத் தூதால் மயங்கி அவர்களைச் சேர விரும்பும் ஆடவர் மனம் வெறுக்குமாறு வயல்களில் புதிய தாமரை மலர்களின்மேல் அம்மகளிர் களைந்து எறிந்த குவளை மலர்கள் (பெண்களின்) கண்களின் கடைப் பகுதிகளைக் காட்டுகின்றன. ஆடவர் வெறுப்புக்குக் காரணம்: தாமரை மலரில் பொருந்திய குவளைப் பூக்களை நோக்கித் தம்மைக் குறிப்பினால் கண் காட்டி அழைக்கின்ற முகமென மயங்கி அவற்றின் அருகில் வந்த ஆடவர்கள் உண்மையறிந்து வெறுத்தனர். மயக்க அணி: தமது குளிர்ந்த கண் பார்வையால் உழவரைத் தம் வசப்படுத்தித் தழுவ வந்த உழத்தியர் அவ்வயலெங்கும் தாமரைமேல் கருங்குவளைமலர் படிந்திருப்பதைக் கண்டு. தமக்கு முன்னரே அந்த உழவர்களைக் கவர்வதற்கு வேறுசில மகளிர் அவர்களைக் கண்களால் நோக்குகின்றார்களென மயங்கினார்கள்: இனி தமது எண்ணம் கை கூடுமோ கூடாதோ என்ற ஐயத்தின் மிகுதியால் மனம் வெறுத்தனர் எனக் கொள்ளலாம். 8 |