பொய்கை - (அம் மிதிலை நாட்டிலுள்ள) நீர் நிலைகளில்; தூவி அன்னம் நடை கண்டு - சிறகுகளையுடைய அன்னங்கள் (மகளிரின்) நடையழகைப் பார்த்து; தம் இனம் என்று தொடரும் - தன் இனமான அன்னப் பறவை என்று மயங்கி (அவர்) பின் தொடர்ந்தன; கூவும் மென்குயில் குதலையர் - (இனிமையாகக்) கூவுகின்ற மென்மையான குயிலின் குரல்போன்ற மழலைச் சொற்களையுடைய மகளிர்; குடைந்த - மூழ்கி விளையாடின; தண்புனல் வாய் - குளிர்ந்த நீரில்; ஓவு இல் - விட்டு நீங்காத; குங்குமம் சுவடு உற - குங்குமக் குழம்பின் சுவடுகள் (தம்மேல்) பொருந்தியதால்; ஒன்றோடு ஒன்று ஊடி - ஒன்றுடன் ஒன்று பிணங்கி; பூ உறங்கினும் - (தண்ணீரிலுள்ள தாமரை முதலிய) மலர்கள் உறங்கினாலும்; புள் உறங்காதன - (அவற்றிலுள்ள) பறவைகள் தூங்காமல் கிடக்கின்றன. மயக்க அணி: குளங்களில் பெண்கள் இறங்கி விளையாகின்றார்கள். அப்பொழுது. அவர்கள் உடம்பில் அணிந்துள்ள குங்குமக் கலவை அக்குளங்கிலுள்ள பறவைகளின் உடல்மேல் படிகிறது. அந்நிலையில் பிற பறவைகள் ஒன்றை ஒன்று நோக்கும்போது தம் இனப் பறவைகளையே பிற இனப்பறவைகளென மயங்கித் தம்முள் மாறுபடுகின்றன. கலவிக் குறி: நிறம் வேறுபடுதலும் நன்மணம் உறுதலும். பூவிக்குத் தூக்கம்: இதழ்குவிதல். பறவைக்குத் தூக்கம்: கலவயைின்றி இளைப்புத் தீரத் தூங்குதல். 9 |