சுவையான கரும்புகளை; ஆட்டிய அமுதமும் - (ஆலையில் வைத்து) ஆட்டுவதால் பெருகும் அமுதம் போன்ற இனிய பாலும் (கரும்புப் பால்); அழிதேன் நறையும் - தேன் கூடுகள் சிதைவதால் சிந்திப் பெருகும் மணமுள்ள தேனும்; அல்லது - (என்னும் இவை மாறி மாறிப் பெருகுவதேயல்லாமல்) இவையல்லாமல்; நளிர்புனல் பெருகலா - குளி்ர்ந்த நீர் பெருக இடம் பெறாதன. நதி வளம்: நதிகளை வருணிக்குங்கால் தாமாகப் பால் சுரக்கின்ற எருமை வளம். மாமரச் சோலை வளம் கரும்புக் குவியல். தேன் பெருக்கம் ஆகியவற்றைக் கூறி நாட்டு வளத்தையும் புலப்படுத்தினார். முதுமேதி: பருவம் நிரம்பிக் கன்றை ஈன்ற எருமை. மேற்கோள் ‘கனைத்திளங் கற்றெருமைகன்றுக் கிரங்கி நினைத்து முலைவழியே நின்று பால் சோர’ - திருப்பாவை-12 10 |