-ஓர் உபாயத்தைத்தேடி; உழல்பவன் - அலைபவனான அந்த இந்திரன்; ஒருநாள் உற்ற மையலால் - ஒரு தினத்தில் அளவற்ற காம மயக்கத்தால்; அறிவு நீங்கி - நல்லறிவுகெட்டு; மாமுனிக்கு - பெருமையுள்ள அக்கௌதம முனிவனுக்கு; அற்றம் செய்து - பிரியுமாறு உண்டாக்கி; பொய்யிலா உள்ளத்தான்தன் - பொய்யில்லாத மனத்தையுடைய அம்முனிவனது; உருவமே கொண்டு - உருவத்தையே தான் எடுத்துக் கொண்டு; புக்கான் - அவனது ஆச்சிரமத்துள்ளே புகுந்தான். இந்திரன் நிலை: அகலிகையின் கண்களாகிய வேலும். மன்மதனின் காம பாணங்களும் ஒரே சமயத்தில் தாக்க. அக் காம மயக்கத்தால் அறிவை இழந்தான் இந்திரன். காமத்தால் வருந்திய அவன் அதிலிருந்து பிழைக்க. ஒரே வழி ‘கௌதம முனிவன் உருவத்திலே சென்று அகலிகையைச் சேர்வதே’ என உறுதி கொண்டான். அதன் பொருட்டு அம்முனிவனை அப்பால் போகுமாறு தந்திரம் செய்கிறான். அம் முனிவனது வடிவிலே ஆச்சிரமத்திற்குள் நுழைகிறான். முனிக்கு அற்றம் செய்தல்: பொழுது புலர்வதன் முன்னே கோழி கூவுமாறு இந்திரன் செய்தான். கௌதம முனிவனும் காலைக் கடன் கழித்தற் பொருட்டு வெளிப்புறம் சென்றான். 18 |