பக்கம் எண் :

300பால காண்டம்  

கூடிய   வில்லம்பை   விடத்   தடுக்க  முடியாத  சொல்லம்பு  மிகக்
கொடியது என்பது விளங்கும்.                               20
   

472.‘தீ விழி சிந்த நோக்கி.
   செய்ததை உணர்ந்து. செய்ய
தூயவன். அவனை. நின் கைச்
   சுடு சரம் அனைய சொல்லால்.
‘’ஆயிரம் மாதர்க்கு உள்ள
   அறிகுறி உனக்கு உண்டாக’’ என்று
ஏயினன்; அவை எலாம் வந்து
   இயைந்தன. இமைப்பின் முன்னம்.

 
  

(அப்பொழுது)  செய்ய தூயவன்-  (நடுநிலை வழிச் செல்லக் கூடிய)
மனத்  தூய்மையுடைய  அம்  முனிவன்;  விழி  தீ  சிந்த நோக்கி -
கண்கள்  தீப்பொறியைக்    கக்குமாறு  கோபித்துப் பார்த்து; செய்ததை
உணர்ந்து  
-  (இருவரும்)  செய்த தீச்செயலை அறிந்து; நின்கைச் சுடு
சரம்  அனைய  சொல்லால்  
-  உனது  கையால் ஏவப்படும் கொடிய
அம்பு  போன்ற  சுடு   சொல்லால்;   அவனை  -  அந்த இந்திரனை;
ஆயிரம்  மாதர்க்கு உள்ள
- பெண்களுக்கு உள்ள ஆயிரம்; அறிகுறி
உனக்கு  
- குறிகள் உனக்கு; உண்டாக என்று - உண்டாகட்டும் என்று;
ஏயினன்   
-   சாப   வார்த்தையை  ஏவினான்;  அவை  எலாம்  -
(அவ்வாறே)  அப்பெண்குறிகள்  ஆயிரமும்;  இமைப்பின் முன்னம் -
இமைப்   பொழுதிலே;   இயைந்தன   -  அவன்   உடம்பில்  வந்து
பொருந்தின.  

செய்ய   தூயவன்:   தன்னோடு   எவ்வித   உறவும்   இல்லாத
இந்திரனுக்குச்   சாபம்  கொடுத்தான்.  அத்தோடு  அமையால்  தன்
மனைவிக்கும்  ஒரு  சார்  அன்பு  காட்டாமல்  சாபம்  கொடுத்தான்.
ஆதலின்  கௌதமன்  தூயவன்  ஆனான்.  இந்திரனுக்கு  அமைந்த
சாபம்:  ஒரு பெண்ணின் குறியிடத்து இந்திரன் மிகவிருப்பம் கொண்டு
இழிந்த   செயல்  புரிந்தமையால்  அதனிடம்  வெறுப்பு  உண்டாகும்
பொருட்டு  அவனுடம்பு முழுவதும் பெண்குறிகள் அமையுமாறு சாபம்
அளிக்கப்  பெற்றது.  சுடு  சரம்  அனைய  சொல்: இராமனது அம்பு
பகைவரைக்  கொல்லுதலாகியத்  தன் பயனை விரைந்து தருதல்போல
முனிவர் சொல் கொடியவரை அழித்தலாகிய தன் பயனைத் தவறாமல்
விரைந்து தரும் என்பது குறிப்பு.                             21
   

473.‘எல்லை இல் நாணம் எய்தி.
   யாவர்க்கும் நகை வந்து எய்தப்
புல்லிய பழியினோடும்
   புரந்தரன் போய பின்றை.
மெல்லியலாளை நோக்கி.
   ‘’விலைமகள் அனைய நீயும்