பக்கம் எண் :

  அகலிகைப் படலம்301

 

கல் இயல் ஆதி’’ என்றான்;
    கருங்கல் ஆய். மருங்கு வீழ்வாள்.

 

புரந்தரன்   எல்லை இல் - (தன் உடம்பு முழுவதும் சாபத்தால்
கெட்டு  விட்டதனால்)  இந்திரன்  அளவில்லாத;  நாணம் எய்தி  -
நாணத்தை    அடைந்து;    யாவர்க்கும்   -  (தனது  நிலையைப்
பார்த்தவர்கள். கேட்டவர்கள்) எல்லோர்க்கும்;  நகை வந்து எய்த -
பரிகாசச்  சிரிப்பு  வந்தெய்தும்படி; புல்லிய பழியினோடும் -  தனக்கு
நேர்ந்த பழியோடும்; போயபின்றை - வானுலகத்திற்குச் சென்ற பின்பு;
மெல்லியலாளை  நோக்கி  -  (அம் முனிவன்)  மெல்லியலாளான
தன் மனைவியைப்  பார்த்து;   விலைமகள்   அனைய   நீயும் -  
(தீய  ஒழுக்கத்தால்)   வேசியைப் போன்ற  நீயும்; கல் இயல் - கல்
வடிவம்; ஆதி என்றான் - ஆகுக என்று சபித்தான்; கருங்கல்ஆய்
- (உடனே)   அவள்  கருங்கல்  வடிவாய்;  மருங்கு  வீழ்வாள் -
பக்கத்திலே வீழ்வாள் ஆயினாள்.

விலைமகள்   அனையவள்:  உண்மையில் அகலிகை நெஞ்சறியக்
கற்பிழந்தவள் ஆகாள். இருந்தும் கௌதமன் சினத்தால் உண்மையை.
ஆராய்ந்து பாராமல்  ‘விலைமகள்  போன்றவள்’  அகலிகை  என்று
கூறுகிறான்.                                             22
 

474.
 

‘’பிழைத்தது பொறுத்தல் என்றும்
   பெரியவர் கடனே; அன்பால்.
அழல் தருங் கடவுள் அன்னாய்!
   முடிவு இதற்கு அருளுக!’’ என்ன.
‘’தழைத்து வண்டு இமிரும் தண் தார்த்
   தசரதராமன் என்பான்
கழல்-துகள் கதுவ. இந்தக்
   கல் உருத் தவிர்தி’’ என்றான்.
 

(அவ்வாறு    விழுகின்ற  அகலிகை  அம்  முனிவனை நோக்கி)
அழல் தரும்   -   (தன்னுடைய    நெற்றிக்    கண்ணிலிருந்தும்.
புன்   சிரிப்பிலிருந்தும்)    நெருப்பைச்     சிதறறும்;     கடவுள்
அன்னாய்
 - உருத்திர  மூர்த்தியை ஒத்த முனிவனே!;  பிழைத்தது
பொறுத்தல்
-  சிறியோர்  செய்த பிழையைப் பொறுப்பது; என்றும்
பெரியவர் கடனே
-   எக்காலத்தும்  பெரியோர்களின் கடமையே
ஆகும்; என்பர் - என்று கூறுவர் (முன்னோர்);  இதற்கு  முடிவு -
(ஆதலால்) இச்  சாபத்திற்கு  ஒரு  முடிவை;  அருளுக  என்ன -
அருள்வீராக என்று வேண்டி நிற்க; தழைத்து வண்டு  -  (அதற்கு
இரங்கிய   அம்  முனிவன்) செழிப்புடையதாய் வண்டுகள்; இமிரும்
தண்தார்
- ஒலிக்கும் குளிர்ந்த  பூமாலையை   அணிந்த;   தசரத
ராமன்  என்பான்
 -  தசரத  ராமன் என்பவனது;  கழல்  துகள்
கதுவ
- திருவடித்  தூள் உன்மேல் படியும்  போது;  இந்தக்  கல்
உரு
- இந்தக் கருங்கல் வடிவம்;  தவிர்தி என்றான்  - நீங்குவாய்
என்று (சாபம் நீங்கும் வழியும்) அருளினான்.