பக்கம் எண் :

302பால காண்டம்  

சிறியர்   பெரியர்: சிறியவர் செய்த பிழை பெருங்கேடு தருவதாக
இருப்பினும்  பெரியவர் அதனைப்  பொறுக்க  வேண்டும்;  அதுவே
அவர்களது  உயர்வான  கடமையாகும்.    அழல்   தரும்  கடவுள்:
நெருப்புப்  போன்ற  செந்நிறம்   பொருந்திய   சிவன்:   அக்கினி
தேவனைப்  போன்ற  தூய்மையுடையவன் - என்று சொல்லலாம். 23
   

475.‘இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்;
   இனி. இந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் அன்றி. மற்று ஓர்
   துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மை வண்ணத்து அரக்கி போரில்.
   மழை வண்ணத்து அண்ணலே! உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன்;
   கால் வண்ணம் இங்குக் கண்டேன்.’
 

இவ்  வண்ணம்  -  இச்  செய்தியே;  நிகழ்ந்த  வண்ணம்  -
(முற்காலத்து) நடந்த  முறையாகும்;  இனி  இந்த - இனிமேல்  (நீ
இவ்வுலகில் பிறந்து தீயவரை அழித்து  நல்லவர்களைப் பாதுகாத்தல்
என்பது    ஏற்பட்ட   பிறகு)   இந்த;   உலகுக்கு  எல்லாம் -
உலகத்திலுள்ள உயிர்களுக்கெல்லாம்;   உய்வண்ணம்  அன்றி  -
(துன்பம்  நீங்கிக்) கடைத்  தேறும்   வழியே  அல்லாமல்;  மற்று
ஓர்  துயர் வண்ணம்
-  அதற்கு   வேறானதொரு   துன்பத்தின்
வழியை;  உறுவது உண்டோ -  அடைதல்  கூடுமோ?  (கூடாது);
மழை   வண்ணத்து  அண்ணலே  -   மேகம்  போன்ற  கரிய
திருமேனியுடைய இராமனே! அங்கு - வருகிற வழியில்  (வனத்தில்);
மைவண்ணத்து   அரக்கி   -    அஞ்சனம்   போலும்   கரிய
நிறத்தையுடைய தாடகை என்னும் அரக்கியோடு; போரில் - செய்த
போரில்;   உன்   வைண்ணம்   கண்டேன்  -  உன்  கையின்
திறத்தைப்  (வில்லினது  ஆற்றலை)  பார்த்தேன்;  இங்குக்  கால்
வண்ணம்
 -    இந்த   இடத்தில்  உன்  திருவடியின்  திறத்தை;
கண்டேன்  - பார்க்கலானேன்.  

மழை   வண்ணத்து  அண்ணல்: கண்டாரின் மனக் கொதிப்பை
நீக்கும்  குளிர்ந்த  தன்மையுடையவன்;  கருநிறம்  பொருந்தியவன்;
கைம்மாறு கருதாது கருணையை  மழையாகப் பொழிபவன் இராமன்.
மைவண்ணத்து   அரக்கி:   பொய்.  கொலை. வஞ்சனை முதலான
தீய பண்புகளுக்கு  உறைவிடமானவள்  தாடகை    -   இருவரின்
கருநிறத்துக்கும்  வேறுபாடு  காட்டப்பெற்றுள்ளது. கை வண்ணமும்
கால்    வண்ணமும்:    முறையே    தீயவர்களை    அழித்தலும்
நல்லவர்களைக் காத்தலும் ஆகிய இருவகைத் திறன்கள்.24
   

476.

தீது இலா உதவிசெய்த
   சேவடிக் கரிய செம்மல்.