பக்கம் எண் :

  அகலிகைப் படலம்303

‘கோது இலாக் குணத்தான் சொன்ன
   பொருள் எலாம் மனத்தில் கொண்டு.
மாதவன் அருள் உண்டாக
   வழிபடு:படர் உறாதே.
போது நீ. அன்னை!’’ என்ன.
   பொன் அடி வணங்கிப் போனாள்.
   

தீது இலா  உதவி  -  தீமையில்லாத  பேருதவியை; செய்த  -
அகலிகைக்குச் செய்தருளிய;  சே   அடிக்   கரிய  செம்மல்  -
செம்மையான திருவடிகளையுடைய கரிய இராமன்;   கோது இலா -
குற்றமற்ற;  குணத்தான்  சொன்ன   -    நற்குணங்களையுடைய
விசுவாமித்திரன்    சொல்லிய;   பொருள்   எலாம்  -  செய்தி
முழுவதையும்;  மனத்தில்   கொண்டு   -   தன்    உள்ளத்தில்
கொண்டு;  அன்னை - (அகலிகையை நோக்கி) தாய் போன்றவளே!;
மாதவன்  அருள் -  மிக்க  தவத்தால்  மேம்பட்ட   கௌதமனது
கருணை; உண்டாக - (உன் பக்கம்)  உண்டாகும்படி;  நீ வழிபடு -
நீ  அவனுக்குப்  பணிவிடை  செய்வாயாக;   படர்     உறாதே -
(இடையிலே உனக்கு ஏற்பட்ட துன்பத்தை நினைந்து)  வருந்தாதே!;
போது  என்ன -  செல்க  என்று  கூற; பொன்அடி - (அகலிகை)
இராமனுடைய   அழகிய  திருவடிகளை;  வணங்கிப் போனாள் -
வணங்கி அப்பால் சென்றாள்.  

தீதிலா உதவி: பிறருக்குத் தீமை பயவாதது; கைம்மாறு கருதாதது;
முன் செய்த உதவியை நோக்காதது. சேவடிக் கரிய செம்மல்: முரண்
தொடை. ஒப்புமை: ‘திருவடியும் கையும் கனிவாயும் செய்ய கரியவன்’
- (சிலம்பு: ஆய்ச். குரவை. படர்க்கை. பரவல் 2)              25  

     கௌதமனிடம்   அகலிகையைச்   சேர்ப்பித்து   மூவரும்
                               மிதிலைப் புறமதிலைச் சார்தல்
   

477.

அருந் தவன் உறையுள்தன்னை
   அனையவர் அணுகலோடும்.
விருந்தினர் தம்மைக் காணா.
   மெய்ம்முனி. வியந்த நெஞ்சன்.
பரிந்து எதிர்கொண்டு புக்கு.
   கடன் முறை பழுதுறாமல்
புரிந்தபின். காதி செம்மல்
   புனித மா தவனை நோக்கி.*
   

அருந்தவன்   - சிறந்த தவத்தைப் புரியும் கௌதம முனிவனது;
உறையுள் தன்னை - ஆச்சிரமத்தை; அனையவர் அணுகலோடும்
-    அவர்கள்   மூவரும்     அடைந்ததும்;      மெய்ம்முனி -