விசுவாமித்திரன் முதலான மூவரும் மிதிலை நகருள் பல காட்சிகளைக் காண்கிறார்கள். கன்னி மாடத்தில் நின்ற சீதையும் இராமனும் ஒருவரை ஒருவர் கண்டு காதல் கொள்கின்றனர். இராமனது நினைவால் சீதை உற்ற துன்பநிலை - அம் மூவரும் சனகன் எதிர்கொள்ளச் சென்று மாளிகையில் தங்குதல் - இராமனுக்குச் சதனாந்தர் விசுவாமித்ரின் வரலாறு கூறுதல் - கௌசிக முனிவன் தவம் செய்தல் - தேவர்கள் கௌசிகனைப் பிரம ரிசியாக்குதல் - சீதையின் உரு வெளிப்பாடு கண்டு இராமன் கலங்குதல் - பின் அந்த இராமன் முனிவரோடும் தம்பியோடும் சனகனது வேள்விச் சாலையை அடைதல் - சனகன் விசுவாமித்திரனை வினவல் - அவரும் விடையளித்தல் ஆகியன அடங்கியுள்ளன. மிதிலைக் கொடிகளின் தோற்றம் |