பக்கம் எண் :

308பால காண்டம்  

482.

பகல் கதிர் மறைய. வானம்
   பாற்கடல் கடுப்ப. நீண்ட
துகில் கொடி. மிதிலை மாடத்து
   உம்பரில் துவன்றி நின்ற.
முகில் - குலம் தடவும்தோறும்
   நனைவன. முகிலின் சூழ்ந்த
அகில்புகை கதுவும்தோறும்
   புலர்வன. ஆடக் கண்டார்.
   

பகல் கதிர் மறைய- பகற்பொழுதிற்குக் காரணமான கதிரவனின்
ஒளிக்கதிர்கள் மறையவும்; வானம் பாற்கடல்   கடுப்ப  -  வானம்
திருப்பாற்கடலைப் போன்று  காட்சியளிக்கவும்;  மிதிலை  மாடத்து
உம்பரில் 
- மிதிலை  நகரின்  உப்பரிகை வீடுகளின் மேல்; துவன்றி
நின்ற 
-  நெருங்கிய;  நீண்ட  துகில்  கொடி - நீளமான கொடிச்
்சீலைகள்; முகில்  குலம் -  மேகக்  கூட்டம்;  தடவும்  தோறும் -
(தம்மை வந்து)  வருடும்   பொழுதும்;  நனைவன - அதன் நீரினால்
நனைவனவாகவும்; முகிலின்   சூழ்ந்த   -   (அம்)  மேகம்போலச்
சூழ்ந்து கொண்ட; அகில்புகை கதுவும் தோறும் - அகிற் கட்டையின்
புகை (தம்மில்  வந்து)   படியும்  பொழுதும்;   புலர்வன  -  உலர்
வனவாகவும்; ஆடக் கண்டார் - ஆடுதலைப் பார்த்தார்கள்.
 

கொடிகளின்     நெருக்கம். மிகுதி. மேகக் கூட்டத்தை  அளாவும்
உயர்ச்சி.   அகிற்புகையின்   மிகுதி   ஆகியன  இதில்  உணர்த்தப்
பெறுகின்றன.  அணி:  தொல்லுப்பெறலணி-துகிற்கொடி  மேகங்களால்
நனைவதும். அகிற் புகையால் உலர்ந்து பழைய நிலையை அடைவதும்
இவ்வணியாகும்.  பாற்கடலும்  துகிலும்:  ‘பாற்கடல்  போன்ற  துகில்’
என்றதால் துகில் வெண்ணிறமுடையது என்பது தெரிகிறது.        3

                                    மூவரும் நகரினுள் புகுதல்
   

483.   

ஆதரித்து. அமுதில் கோல் தோய்த்து.
   ‘அவயமம் அமைக்கும் தன்மை
யாது?’ எனத் திகைக்கும் அல்லால்.
   மதனற்கும் எழுத ஒண்ணாச்
சீதையைத் தருதலாலே.
   திருமகள் இருந்த செய்ய
போது எனப் பொலிந்து தோன்றும்.
   பொன் மதில். மிதிலை புக்கார்.
 

ஆதரித்து-  (மன்மதன்  சீதையின்  மேனியைப்  போன்ற  ஓர்
அழகிய வடிவத்தை) எழுத விரும்பி; அமுதில் கோல் தோய்த்து -