அமுதத்தில் எழுதுகோலைத் தோய்த்துக் கொண்டு; அவயவம் அமைக்கும் - அவள் உறுப்புகளைச் சித்திர்க்கும்; தன்மை யாது என - விதம் (அறியாமல் அவ்வகை) எதுவோ என்று; திகைக்கும் அல்லால் - திகைத்து நிற்பானேயல்லாமல்; மதனற்கும் - அந்த மன்மதனுக்கும்; எழுத ஒண்ணா - எழுத முடியாத; சீதையைத் தருதலாலே - பேரழகு மிக்க சீதையைப் பெற்றதால்; திருமகள் இருந்த - இலக்குமி வாழும்; செய்ய போது என - செந்தாமரை மலர் போல; பொலிந்து தோன்றும் - விளக்கமுற்றுத் தோன்றும்; பொன் மதில் மிதிலை - பொன்மதில் சூழ்ந்த மிதிலை நகரினுள்ளே; புக்கார் - (மூவரும்) சென்றார்கள். |
சீதையின் அழகு: மன்மதன் உலகத்தவர் அனைவரது அழகையும் வரையறுத்து உணர்ந்தவன்; ஆண் பெண்களாகிய மக்களின் மனத்திலே தோன்றியுள்ளவன்: தனக்கு வடிவம் இல்லாமல் இருந்தும் ஐந்து அம்புகளைக் கொண்டு மூவுலகையும் தன்வயப்படுத்தும் திறமை பெற்றுள்ளான். இத்தகைய இயல்புடைய அம் மன்மதன் எல்லையில்லாத பேரழகு உடைய சீதையின் உருவத்தைத் தானே சித்திரத்தில் அமைக்கக் கருதினான்; அதற்கு வண்ணப் பொருள் அமுதமேயெனத் தீர்மானித்து. அந்த அமுதத்திலே எழுதுகோலைத் தோய்த்து எடுத்து எழுதத் தொடங்கினாலும் அவளது அழகை முழுமையாக எழுத முடியாமல் திகைப்பானேயல்லாமல் அச் சீதையின் உறுப்புகளுள் ஒன்றைக் கூடச் சரியாக எழுத முடியாதாம். 4 தெருக்களின் சிறப்பு |
484. | சொற்கலை முனிவன் உண்ட சுடர் மணிக் கடலும். துன்னி அல் கலந்து இலங்கு பல் மீன் அரும்பிய வானும் போல. வில் கலை நுதலினாரும். மைந் தரும். வெறுத்து நீத்த பொன் கலன் கிடந்த மாட நெடுந் தெருஅதனில் போனார். |
சொற்கலை முனிவன் - தமிழிலே இலக்கண நூலைச் செய்த அகத்திய முனிவனால்; உண்ட - பருகப்பட்டு; சுடர்மணிக் கடலும் - (நீர் வற்றிய) ஒளி பொருந்திய இ ரத்தினங்கள் கிடக்கும் கடலும்; அல் கலந்து - இரவுக் காலத்தில் பொருந்தி; துன்னி இலங்கு - நெருங்கி விளங்கும்; பல்மீன் அரும்பிய - நட்சத்திரங்கள் பல தோன்றிய; வானும் போல - ஆகாயமும் போல; வில்கலை நுதலினாரும் - ஒளியுள்ள பிறை போன்ற நெற்றியுடைய மகளிரும்; மைந்தரும் - ஆடவரும்; வெறுத்து நீத்த - வெறுப்புற்றுக் கழற்றியெறிந்த; பொன்கலன் கிடந்த - பொன் அணிகள் தெருவெங்கும் விழுந்துகிடக்கின்ற; மாட நெடுந்தெருவதனில் - மாடங்களையுடைய நீண்ட வீதியிலே; போனார் - (அம் மூவரும்) சென்றார்கள். |