பக்கம் எண் :

  மிதிலைக் காட்சிப் படலம்311

486.

தண்டுதல் இன்றி ஒன்றி.
   தலைத்தலைச் சிறந்த காதல்
உண்டபின். கலவிப் போரின்
   ஒசிந்த மென் மகளிரேபோல்.
பண் தரு கிளவியார்தம்
   ?புலவியில் பரிந்த கோதை.
வண்டொடு கிடந்து. தேன்சோர்.
   மணி நெடுந் தெருவில் சென்றார்.
 

தண்டுதல் இன்றி- நீங்காமல்; தலைத் தலை ஒன்றி - (கணவன
மனைவி  என்கிற) இரண்டு இடங்களிலும் ஒரு தன்மைய தாய்; சிறந்த
காதல்   
-   மிகுதியான   ஆசையின்  பயனான  காம  இன்பத்தை;
உண்டபின்  
-  (ஆடவரும்  மகளிரும்)  ஒருசேர அனுபவித்த பின்பு;
கலவிப்  போரின்  
-  அந்தப்  புணர்ச்சியாகிய போரிலே;  ஒசிந்த
- சோர்ந்து  கிடந்த;  மென் மகளிரே  போல்   -  மென்மையான
பெண்களைப் போல; பண்தரு  கிளவியார்தம் - இசைப் பண்ணைப்
போன்ற சொற்களைப் பேசும் பெண்களின்; புலவியில்- ஊடல்களிலே;
பரிந்த கோதை  
-  (அவர்களால்)  கழற்றி  வீசப்பட்ட  மாலைகள்;
வண்டொடு   கிடந்து -  
(தம்மேல்   மொய்த்த)    வண்டுகளுடன்
கீழே  விழுந்து   கிடந்து;    தேன்   சோர் தேன் வழிவதற்கு
இடமான;   மணி  நெடுந்தெருவில் -   அழகிய   பெருவீதிகளில்;
சென்றார் -
போனார்கள்.

மாதரும்   பூமாலைகளும்: புணர்ச்சிக்குப்பின் மெலிந்து உறங்குகிற
பெண்களைப்போல்   அம்மகளிரால்   ஊடலால்    வீசியெறியப்பட்ட
பூமாலைகள்   வாடிக்   கிடக்கின்றன.   மிதிலைத்தெரு:  மிதிலையின்
தெருக்கள்   பலவகைப்   பட்டன     என்பதைத்  தெரிவிக்க  மூன்று
பாடல்கள் அமைந்துள்ளன.                                    7

                                    வீதிகளில் கண்ட காட்சிகள்
 

487.

நெய் திரள் நரம்பின் தந்த
   மழலையின் இயன்ற பாடல்.
தைவரு மகர வீணை
   தண்ணுமை தழுவித் தூங்க.
கை வழி நயனம் செல்ல
   கண் வழி மனமும் செல்ல.
ஐய நுண் இடையார் ஆடும்
   ஆடக அரங்கு கண்டார்.
 

நெய்திரள் நரம்பின் - தேன் ஒழுக்குப் போலத் திரண்ட யாழின்
நரம்பால்   எழும்   இசை   போல;  தந்த  மழலையின்  இயன்ற
- (கேட்பதற்கு இனிமையாகப்) பாடப்பட்ட மழலைச்சொற்க