ளால் அமைந்த; பாடல் - வாய்ப்பாட்டு இசையும்; தைவரும் மகர வீணை - (கைவிரலால்) தடவி வாசிக்கப்படுகிற மகர வீணையின் இசையும்; தண்ணுமை - மத்தளத்தின் ஓசையும்; தழுவித் தூங்க - மாறுபடாமல் ஒன்றோடு ஒன்று ஒத்து ஒலிக்கவும்; கைவழி நயனம் செல்ல - (பலவகையாகக் குறிப்புக் காட்டுகின்ற தம்முடைய) கைகள் செல்லும் வழியே தம் கண்களின் குறிப்புப் பார்வை செல்லவும்; கண் வழி மனமும் செல்ல - அக்கண்களின் பார்வை செல்லும் வழியிலே மனத்தின் குறிப்புச் செல்லவும்; ஐயம் நுண் இடையார் - உள்ளதா இல்லையா என்று கண்டவர் சந்தேகப்படும்படியான சின்ன இடையை உடைய மகளிர்; ஆடும் - நாட்டியம் ஆடுகின்ற; ஆடக அரங்கு - பொன்மயமான நடன சாலைகளை; கண்டார் - பார்த்தார்கள். நடனத்தில் செய்யும் முறை நான்கு: கண்கள். கை. மனம். உடல் என நான்கன் தொழில்களாலும் நடனமுறை நிகழும். கைவழி நயனம் செல்ல: கையில் தொழில். கண்வழி மனமும் செல்ல: கருத்தில் தொழில். மழலையின் இயன்ற பாடல்: மிடற்றின் தொழில். ஆடும்: உடலின் தொழில் யாழின் நரம்புக்கு உவமை: தேன் ஒழுக்கு. நெய்: இங்கே ‘தேன்’ என்னும் பொருள் தருகிறது. யாழ்வகை நான்கு: 1. பேரியாழ்; 2. மகர யாழ்; 3. சகோட யாழ்; 4. செங்கோட்டி யாழ்; மகரயாழ்: 19 நரம்புகளைக் கொண்டது. நரம்பு. வீணை. தண்ணுமை (ஒலிகள்) - கருவியாகு பெயர்கள். 8 |