பொருளிலே செல்வது) போல ஒரு தன்மையுடையனவுமாகி; கண் புலத்து - கண்ணின் பார்வைக்கு; இனைய என்று - இத்தன்மையன என்று; தெரிவு இல - அறிய முடியாதனவான; கொட்பு உறு - சுழன்று ஓடுகின்ற; கலினப் பாய்மா - கடிவாளம் பூண்டு பாய்ந்து செல்லும் இயல்புள்ள குதிரைகள்; திரியக் கண்டார் - எங்கும் திரிவதைப் பார்த்தார்கள். குதிரைகள் இயல்பு: இடையில் நிற்காமலும். வழியைவிட்டு விலகாமலும் குதிரைகள் ஓடும் இயல்புடையன. ‘’கூட்டுகிற முடுக்கிவிட்ட குயமகன் திகிரிபோல வாள்திறல் தேவதத்தன் கலினமா திரியுமன்றே’’ - சிந்தா:786. ஞனிகள்-குதிரைகள். ஞானிகளின் அறிவு ஒன்றாயிருந்தும் சிறிது நேரத்திலே பல பொருளிடத்தும் செல்லுதல்போலக் குதிரை ஒன்றாயிருந்தும் சிறிது. நேரத்திலே. பல இடத்தும் செல்லும் தன்மையது. மேலோர் நட்பு இடையறாமை: ‘நிறை நீர நீரவர் கேண்மை பிறைமதி’ -குறள்782. ‘’பெரியவர் கேண்மை பிறைபோல நாளும் வரிசை வரிசையா நந்தும்’’ -நாலடியார்:125 12 |