பக்கம் எண் :

  மிதிலைக் காட்சிப் படலம்395

நிறமுடைய     விடம்  காணப்படுகிறதே!  என்று காதல்   நோயால்
வருந்தும்   இராமன்   தன்னை  வருத்துகின்ற  நிலாவைப்   பழித்து
கூறுகின்றான்.   கொள்ளை  கொள்ளக்  கொதித்தெழு  நிலா:  எனது
உயிரை  நானும்  அறியாமல் கவர்ந்து செல்வதற்குச்  சீறியெழும் நிலா
என்றும் உரைக்கலாம்.                                     146
 
626.ஆகும் நல்வழி; அல்வழி என் மனம்
ஆகுமோ? இதற்கு ஆகிய காரணம்.
பாகுபோல் மொழிப் பைந்தொடி. கன்னியே
ஆகும்; வேறு இதற்கு ஐயுறவு இல்லையே!
 

ஆகும்-   ஆக்கத்திற்குரிய; நல்வழி அல்வழி - நல்வழி அல்லாத
தீய  நெறி;  என்மனம்  ஆகுமோ  -  எனது  நேர்மையான மனம்
செல்லுமோ?; அதற்கு ஆகிய காரணம் - (அப்படியிருக்க என் மனம்
இம்   மங்கையிடம்   காதல்  கொண்டு  சென்றதற்குப்)   பொருந்திய
காரணம்;  பாகுபோல் மொழி  - பாகுபோன்ற இனிய சொற்களையும்;
பைந்தொடி  
-   பசும்பொன்   தொடியையும்  உடைய  இந்நங்கை;
கன்னியே   கும்
- (திருமணமாகாத) கன்னிகையே ஆவாள்; இதற்கு
வேறு   ஐயுறவு  இல்லை  
-  (இந்த  முடிவுக்கு  மாறாக)  ஐயப்பட
வேண்டியது ஒன்றுமில்லை.   

தனது     மனம்    அம்   மங்கையிடம்   சென்றதால்   அவள்
திருமணமாகாத  கன்னிப் பெண்ணாக இருக்கவேண்டுமென்று  இராமன்
கருதுகின்றான்.   சான்றோர்க்குத்   தூய  மனச்சான்றே  அளவுகோல்.
நல்வழியல்லாத அல்வழி: பிறன் மனைவியை விழைதல்.          147
   
                                           திங்களின் மறைவு

627.கழிந்த கங்குல் அரசன் கதிர்க் குடை
விழுந்தது என்னவும். மேல் திசையாள் சுடர்க்
கொழுந்து சேர் நுதற் அறு சுட்டி போய்
அழிந்தது என்னவும். ஆழ்ந்தது - திங்களே.
 

கழிந்த - இறந்து போன; கங்குல் அரசன் - இரவாகிய அரசனது;
கதிர்க்குடை
  ஒளியுள்ள  வெண்கொற்றக்  குடையானது; விழுந்தது
என்னவும்
- (கீழே) விழுந்தது போலவும்; மேல்திசையாள்- மேற்குத்
திசையான பெண்ணினுடைய; சுடர்க் கொழுந்து சேர் - இளமையான
ஒளி    பொருந்திய; நுதல்  கோது  அறு  சுட்டி  -   நெற்றியில்
அணிந்துள்ள   குற்றமற்ற   சுட்டி  என்னும்  அணியானது;  போய்
அழிந்தது என்னவும்
- கெட்டு  அழிந்தது  போலவும்;  திங்கள் -
சந்திரன்;  ஆழ்ந்தது  - (மேற்கடலில்) மூழ்கியது.   

வெண்     கொற்றக்குடை வீழ்தல்: அரசன் ஒழிந்த  நிலையையும்.
அவன்   தேவியின்   நெற்றிச்சுட்டி   அழிந்தமை   மேற்குத்  திசை
அரசியின் துக்கக் குறி