பக்கம் எண் :

396பால காண்டம்  

யையும்    உணர்த்தும் என்பது  குறிப்பு. தற்குறிப்பேற்றவணி.  திலகம்
இடாமை.  நெற்றிச்சுட்டி  அணியாமை  முதலியன  கணவரை  இழந்த
பெண்களுக்கு உரியன.                                     148
   

628.

வீசுகின்ற நிலாச்சுடர் வீழ்ந்ததால்-
ஈசன் ஆம் மதி ஏகலும். சோகத்தால்
பூசு வெண் கலவைப் புனை சாந்தினை
ஆசை மாதர் அழித்தனர் என்னவே.

 

ஈசன் ஆம் மதி- உயிருக்கு உயிரான சந்திரன் என்னும் கணவன்;
ஏகலும்  
-   தம்மைப்  பிரிந்து  போன  பின்பு;  ஆசை  மாதர் -
திசைகளாகிய   (அவனுடைய)   ஆசை   மனைவியர்;  பூசுவெள்  -
(அக்கொழுநனால்   பூசப்பட்ட)   வெண்மையான;  கலவைப் புனை
சாந்தினை  
-  கலவையாகிய  சந்தனக்  குழம்பை;  சோகத்தால்  -
அவனைப்   பிரிந்த    துயரத்தால்;    அழித்தனர்   என்ன    -
அழித்துவிட்டவர்களைப் போல; வீசுகின்ற நிலாச்சுடர்  -  (சந்திரன்
மறைந்த   அளவில்)   முன்பு  (எல்லாத்  திசையிலும்)   பரவியிருந்த
அவனது ஒளியாகிய நிலா; வீந்தது - (ஒளி) ஒழிந்தது.   

ஆசை  மாதர்:  திசைகளாகிய   மனைவியர்;  காதலுடைய  மாதர்
எனவும் பொருள் தரும். தற்குறிப்பேற்றவணி.                   149
 
  
                                     
கதிரவன் தோற்றம்
 

629.
 

ததையும் மலர்த் தார் அண்ணல் இவ் வண்ணம்
   மயல் உழந்து. தளரும் ஏல்வை.
சிதையும் மனத்து இடருடைய செங்கமலம்
   முகம் மலர. செய்ய வெய்யோன்.
புதை இருளின் எழுகின்ற புகர் முக
   யானையின் உரிவைப் போர்வை போர்த்த
உதைய கிரி எனும் கடவுள் நுதல் கிழித்த
   விழியேபோல். உதயம் செய்தான்.
 

ததையும் மலர்த்ததார்- நெருங்கிய மலர்மாலையணிந்த; அண்ணல்
-  இராமன்; இவ் வண்ணம்  -  இவ்வாறு;  மயல் உழந்து - காதல்
மயக்கத்தால்   வருந்தித்;  தளரும்  ஏல்வை  -  தளர்ச்சி அடைகிற
காலத்தில்;   செய்ய  வெய்யோன்  -  செங்கதிர்களையுடையவனான
சூரியன்; சிதையும் மனத்து -நிலை குலைகின்ற தம் நெஞ்சிலே; இடர்
உடைய 
- சோகத்தையுடைய; செங்கமலம் - செந்தாமரைகளாகிய தன்
மனைவியரின்; முகம்  மலர  -  முகங்கள்  (வந்து தான் கூடுவதால்)
மலர்ச்சி பெறும்படி; புதை இருளின் -ஆழ்ந்த இருளாகிய; எழுகின்ற
புகர்  முகம்  
-  உயர்ந்து தோன்றுகின்ற செம்புள்ளிகளைக் கொண்ட
முகத்