பக்கம் எண் :

  மிதிலைக் காட்சிப் படலம்397

தோடு     கூடிய;  யானையின் உரிவை - யானையினது தோலாகிய;
போர்வை
-  போர்வையை;  போர்த்த  -  (தன்மேல்)  தரித்துள்ள;
உதயகிரி எனும்  கடவுள்  
- உதயமலையாகிய உருத்திர மூர்த்தியின்;
நுதல் கிழித்த
- நெற்றியிலிருந்து திறந்து தோன்றின; விழியே போல்
- நெருப்புக் கண்போல; உதயம் செய்தான் - உதித்தான்.
   

கதிரவனைக்     கண்ட அளவில் தாமரை மலர்தலும்.  அவனைப்
பிரிந்த  கணமே  அது குவிந்ததுமாகிய இயல்புபற்றித் தாமரைகளாகிய
பெண்களுக்குக்   கதிரவனைத்   தலைவனாகக்  கூறுதல்  கவி  மரபு.
சுருங்கச்   சொல்லல்   அணிக்கு   அங்கமாக   உருவக   அணியும்
உவமையணியும்    வந்துள்ளன.   கரிய   இருளிலே   மறைந்துள்ள
உதயமலைக்குக்  கரிய  நிறமுள்ள  யானையின்  தோலைப் போர்த்த
சிவனும்.  அம் மலையின் உச்சியிலே உதித்து விளங்கும் கதிரவனுக்கு
அச்சிவனது  நெற்றியில்  விளங்கும்  நெருப்புக்  கண்ணும்  உவமை.
யானையின்    முகப்    புள்ளிகளுக்கு    உதயத்துத்    தோன்றும்
விண்மீன்களை உவமையாகக் கொள்ளலாம்.                    150
   

630.விசை ஆடல் பசும் புரவிக் குரம் மிதிப்ப.
   உதயகிரி விரிந்த துளி
பசை ஆக. மறையவர் கைந் நறை மலரும்
   நிறை புனலும் பரந்து பாய.?
அசையாத நெடு வரையின் முகடுதொறும்
   இளங் கதிர் சென்று அளைந்து. வெய்யோன்.
திசை ஆளும் மத கரியைச் சிந்தூரம்
   அப்பியபோல் சிவந்த மாதோ!
 

விசை    -  வேகமும்;  ஆடல்  -  வலிமையும்;  பசும்புரவி -
பசுமையுடைய  குதிரைகளின்;   குரம்   -  குளம்புகள்;  மிதிப்ப -
மிதித்தலால; உதயகிரி  - உதயமலையில்;  விரிந்த  தூளி - பரவிய
செந்துகள் - பசையாக - நனையும்படி; மறையவர் கை - வேதியர்கள்
கையால் - நறை மலரும் - தேன் நிறைந்த மலர்களும்; நிறை புனலும்
-  நிறைந்த  அர்க்கிய  நீரும்;  பரந்து  பாய  - பரவிப்  பாய்ந்திட
(அப்பசையான  செந்தூளியைக்  கொண்டு);  வெய்யோன் - சூரியன்;
திசை  ஆளும்
- கிழக்குத் திசையை இடமாகக் கொண்ட. மத கரியை
-  மத  யானைக்கு; சிந்துரம் அப்பிய போல் - சிந்தூரத் திலகத்தை
அப்பியது  போல; அசையாத  நெடுவரையின் - சலனமில்லாத அவ்
உதய  மலையின்; முகடு தொறும் -சிகரங்களில் எல்லாம்; இளங்கதிர்
சென்று  
- இளமையான சூரிய கதிர்கள் சென்று; அளைந்து - படிந்து;
சிவந்த
- சிவந்த நிறமாய் விளங்கின.  

கிழக்கில்   உள்ள உயர்ந்த சிகரத்தில் விளங்கும் சூரியக் கதிர்கள்.
கிழக்குத்  திசைக்குரிய  யானையின்  முகத்தில் தீட்டப்பட்ட சிந்தூரத்
திலகம்   போன்று   இருந்து   -  தற்குறிப்பேற்றவணி.  காலையந்தி
வழிபாட்டில்  மறையவர்  மந்திரத்தின் மூலம் எடுத்துவிடும் அருக்கிய
நீர். அந்த வேளையில் மந்தேகர் என்ற அசுரரால்