பக்கம் எண் :

  மிதிலைக் காட்சிப் படலம்399


   

மண்ணும் மணி முழவு அதிர. வான் அரங்கில்
   நடம்புரி வாள் இரவி ஆன
கண்ணுதல் வானவன். கனகச் சடை விரிந்தா
   லென விரிந்த - கதிர்கள் எல்லாம்.

 

எண்     அரிய- அளத்தற்கு அரிய; மறையினொடு - வேதப்
பாடல்களோடு;  கின்னரர்கள் -  கின்னரர்;   இசைபாட -  கானம்
பாடவும்;  உலகம் ஏத்த - உயர்ந்தவர் துதிக்கவும்; விண்ணவரும் -
தேவர்களும்;   முனிவர்களும்   - முனிவர்களும்;   வேதியரும் -
அந்தணர்களும்; கரம் குவிப்ப  - கை கூப்பி வணங்கவும்;  வேலை
என்னும்
- கடல் என்கிற; மண்ணும் மணி முழவு -மார்ச்சனை பூசிய
அழகிய  மத்தளம்;  அதிர  -  முழங்கவும்;  வான்   அரங்கின் -
வானமாகிய நடன சபையிலே; நடம் புரி - நடனம் ஆடுகின்ற; வாள்
இரவி ஆன
- ஒளி பொருந்திய சூரியனாகிய; கண் நுதல் வானவன்
- நெருப்புக்  கண்ணை  நெற்றியிலே உடைய  உருத்திர  மூர்த்தியின்;
கனகம்  சடை  
-  பொன்னிறமான சடைகள்;  விரிந்தால்  என -
விரிந்தது போல; கதிர்கள் எல்லாம் -(செந்நிறமுள்ள)ஒளிக் கதிர்கள்
யாவும்; விரிந்த - எங்கும் பரவின.
    

வானத்திலே     சூரியனின் கதிர்கள் பரவுதல் வானத்தை அளாவி
ஓங்கி  உயர்ந்து சிவனது செஞ்சடை விரிதலை ஒத்துள்ளது  என்றார்-
தன்மைத்  தற்குறிப்பேற்ற  அணி.  சிவனது  நடனத்துக்கு  மிருதங்க
நாதம்  போலக்  கதிரவனின் நடனத்திற்குக் கடல்முழக்கம்;  சிவனுக்கு
அம்பலம் போலக்  கதிரவனுக்கு  அம்பரம்.  மண்:    மத்தளத்திற்குத்
தடவும் மாப்பசை.                                         153

             இராமன் துயில் நீங்கியபின் முனிவரோடும் தம்பியோடும்
                          சனகனது வேள்விச் சாலையைச் சார்தல்
 

633.கொல் ஆழி நீத்து. அங்கு ஓர் குனி வயிரச்
   சிலைத் தடக் கைக் கொண்ட கொண்டல்.
எல் ஆழித் தேர் இரவு இளங் கரத்தால்
   அடி வருடி அனந்தல் தீர்ப்ப.
அல் ஆழிக் கரை கண்டான் - ஆயிர வாய்
   மணி விளக்கம் அழலும் சேக்கைத்
தொல் ஆழித் துயிலாதே. துயர் ஆழி
   நெடுங் கடலுள் துயில்கின்றானே.
 

அங்கு     - பாற்கடலில்; கொல் ஆழி - கொல்ல வல்ல சக்கரப்
படையை; நீத்து -  நீக்கிவிட்டு;  ஓர் குனி வயிரச்சிலை - வளைந்து
உறுதி  வாய்ந்த  ஒப்பற்ற கோதண்ட வில்லை; தடக் கைக் கொண்ட
- பெரிய  கையிலே   கொண்டு   எழுந்தருளிய; கொண்டல் -  மேக
நிறத்தவனான இராமன்; ஆயிரம் வாய் - ஆயிரம் முகங்களி