பக்கம் எண் :

400பால காண்டம்  

லும்;    மணி விளக்கம் அழலும் - மாணிக்கமான விளக்குகள் ஒளி
செய்யப்பெற்ற; சேக்கை  -  (ஆதிசேடனாகிய) படுக்கையிலே; தொல்
ஆழி
-  பழமையான பாற் கடலில்; துயிலாது - தூங்காமல் (இருந்து);
துயர்  ஆழி
- (பாற்கடலில் பாம்பு அணையில் பள்ளிக் கொள்ளாமல்
இராமனாக    அவதரித்து)    (சீதையைச்   சேராமல்   உண்டாகிய)
மனத்துன்பமாகிய; நெடுங் கடலுள் - பெரிய கடலில்; துயில்கின்றான்
- மயங்கிக் கிடக்கின்றன; எல் ஆழித் தேர் - (அவனை) ஒளியுடைய
ஒற்றைச் சக்கரத் தேரைக் கொண்ட; இரவி - சூரியன்; இளங்கரத்தால்
-  மெல்லிய  கைகளால்;  அடி  வருடி  -  (திருவடிகளை இனிதாகத்
தடவிக்  கொடுத்து;  அனந்தல்  தீர்ப்ப - (அந்த இராமனின்) துயில்
மயக்கத்தைத்  தீர்க்க (அதனால்);  அல்  ஆழிக்  கரை - இரவாகிய
கடலின் எல்லையை; கண்டான் - பார்த்தான்.

பகலவன்   உதித்து அவனுடைய கதிர்கள் வெளிப்பட்டு விளங்கிய
அளவில்   இராமன்  துயில்  உணர்ந்தான்.  உயர்ந்தோரைத்  துயில்
உணர்த்த வேண்டுபவர் தம் மெல்லிய கைகளால் அவர்  திருவடிகளை
வருடித்    துயில்   எழுப்புதல்.   முறையாகும்.   அதனால்  ‘இரவி
இளங்கரத்தால்  அடிவருடி  அனந்தல் தீர்ப்ப’ என்றார். கொண்டல் -
உவமையாகு பெயர்.                                       154
 

634.ஊழி பெயர்ந்தெனக் கங்குல் ஒருவண்ணம்
   புடை பெயர. உறக்கம் நீத்த
சூழி யானையின் எழுந்து. தொல் நியமத்
   துறை முடித்து. சுருதி அன்ன
வாழி மாதவற் பணிந்து. மனக்கு இனிய
   தம்பியொடும். வம்பின் மாலை
தாழும் மா மணி மௌலித் தார்ச் சனகன்
   பெரு வேள்விச் சாலை சார்ந்தான்.
 

ஊழி பெயர்ந்தென- யுகமே கழிந்தாற் போல; கங்குல் - இரவுக்
காலமானது;  ஒரு  வண்ணம் - ஒருவாறு;  புடை  பெயர  - (தன்)
நிலையிலிருந்து  நீங்க; உறக்கம் நீத்த - (இராமன்) தூக்கத்தை விட்டு
எழுந்த; சூழி யானையின் - முகபடாமுள்ள யானை போல; எழுந்து-
துயில்  நீங்கி எழுந்து; தொல் நியமத் துறை - பழமையான நித்தியக்
கடன்களை; முடித்து -  நிறைவேற்றி;  சுருதி  அன்ன  மாதவன் -
வேதத்தின் உருவம் போன்ற கோசிக முனிவனை; பணிந்து - வணங்கி
(அவனொடும்);   மனக்கு   இனிய  -   (தன்)  மனத்திற்கு  இனிய;
தம்பியொடும்
-தம்பியான இலக்குவனுடனும்; வம்பின் மாலை தாழும்
-  மணங்  கமழும் மாலை தாழ்ந்த; மா மணி மௌலி - சிறந்த மணி
மகுடத்தையும்; தார் - குலத்திற்குரிய மாலையையும் அணிந்த; சனகன்
- சனக மன்னனது; பெரு வேள்விச் சாலை - பெரிய யாக சாலையை
அடைந்தான்.