பக்கம் எண் :

402பால காண்டம்  

‘விருந்தினர்கள்; நின்னுடைய வேள்வி
   காணிய வந்தார்; வில்லும் காண்பார்;
பெருந் தகைமைத் தயரதன் தன் புதல்வர்’ என.
   அவர் தகைமை பேசலுற்றான்;
 

இருந்த  குல குமரர்தமை- (சனகன்) தன் அருகில் அமர்ந்திருந்த
உயர்குல மைந்தர்களை; இருகண்ணின் - (தன்) இரண்டு  கண்களாலும்;
அழகு  முகந்து  பருக  
-  அழகை  அள்ளி முழுவதும் பருகும் படி;
நோக்கி  
-  பார்த்து;  அருந்தவனை - (உடனே) அருந்தவத்தவனான
கோசிகனை;  அடிவணங்கி - திருவடிகளில் விழுந்து  வணங்கியவனாய்
(அவரை  நோக்கி);  அடிகள்  -  தவ வேதியரே!’ யாரை இவர் - இக்
குமாரர்கள்   யாவர்?;  உரைத்திடுமின்  -  (இவர்கள்  இத்தன்மையர்
என்று)  சொல்வீராக;  என்ன  -  என்று  கேட்க (கோசிக முனிவன்);
விருந்தினர்கள்   
-   (உன்பக்கம்)   புதியவராக   வந்த   இவர்கள்;
பெருந்தகைமை
- பெருந்தகைமை நிரம்பிய; தயரதன் தன் புதல்வர் -
தசரத   மன்னரின்  மைந்தர்கள்;  நின்னுடைய  வேள்வி  -  உனது
யாகத்தை;  காணிய  வந்தார் -  காணும்  பொருட்டு வந்துள்ளார்கள்
(அது  தீர்ந்துவிட்டதால் இனி); வில்லும் காண்பார் - (உன்னிடமுள்ள)
சிவதனுசையும்  பார்ப்பார்கள்;  என - என்று கூறி; அவர் தகைமை -
அம்  மன்னரின்  மைந்தர்  தம்  பெருமைகளை;  பேசல் உற்றான் -
சொல்லத் தொடங்கினான்.  

யாரை     இவர்   உரைத்திடுமின் - ‘ஐ’  இடைச்சொல்.   அவரது
குலப்பெருமை    அவர்   பெருமையே  என்பது  உணருமாறு  ‘அவர்
தகைமை  பேசல்  உற்றான்’   என்றார்.  வில்லும்  காண்பார்: மற்றவர்
போல் வேள்வியைக் கண்களால்  காண்டலோடு அமையாமல் நீ கன்னி
மணத்தின்     பொருட்டு.   வைத்துள்ள   சிவதனுசையும்   வளைக்க
வல்லவர்கள் என்ற குறிப்பும் தோன்றும்.                       157