பக்கம் எண் :

  குலமுறை கிளைத்து படலம்405

உலகிலிருந்து     பூமிக்கு)   கொண்டு   வந்த   இந்த வம்சத்தவனான
இட்சுவாகு  மன்னனை;  அறியாதார்  -  அறியாதவர்; அறியாதார் -
அறிவில்லாதவரே ஆவர்.  

திருவரங்கம்:     வைகுண்டம். திருப்பாற்கடல். யோகியரின் உள்ளத்
தாமரை  என்னும்  இவற்றைக்   காட்டிலும்  திருமால்   மனம் உவந்து
எழுந்தருளியிருக்கும்  இடமாதல்  பற்றி  இவ்  விமானத்திற்கு  ‘ரங்கம்’
(அரங்கம்)   எனப்   பெயர்     அமைந்தது.   இட்சுவாகு   மன்னன்:
வைவச்சுவத  மனுவின்  மகனாகிய    இட்சுவாகு  மன்னன்  பிரமனை
நோக்கிப்  பலகாலம்  தவம்    புரிந்து  அவன் அருளால் திருமாலைப்
பெற்றுத்  திருவயோத்திக்கு  எழுந்தருளச்செய்து    பிரதிட்டை செய்து
வழியாடு  செய்தான்.  அந்த அரங்கநாதனே   இரவிகுல மன்னவர்க்குக்
குலதெய்வமாக   விளங்கினான்.  பரஞ்சுடர்  -  கதிரவன்.    சந்திரன்.
நெருப்பு என்னும் முச்சுடர்களிலும் மேம்பட்ட ஒளியுருவம்.          2
   

639.

‘தான். தனக்கு வெலற்கு அரிய
   தானவரை. “தலை துமித்து. என்
வான் தரக்கிற்றிகொல்?” என்று
   குறை இரப்ப. வரம் கொடுத்து. ஆங்கு
ஏன்று எடுத்த சிலையினன் ஆய்.
   இகல் புரிந்த இவர் குலத்து ஓர்
தோன்றலை. பண்டு. இந்திரன்காண்.
   விடை ஏறாய்ச் சுமந்தானும்.
 

தான்    - இந்திரன் (தான்); தனக்கு வெலற்கு அரிய - தன்னால்
வெல்வதற்கு  முடியாத;  தானவரை - அசுரர்களின்; தலை துமித்து -
தலைகளைத் துணித்து;  வான்  தரக்கிற்றி கொல் - தேவலோகத்தை
(அவர்களிடமிருந்து)  மீட்டுக்  கொடுக்க   வல்லமையுடையவரா  நீர்?;
என்று  
-  என்று கூறி;  குறை இரப்ப - (தனது) குறையைச் சொல்லி
வேண்ட;  வரம்  கொடுத்து  -  (அவ்வாறே செய்வதாக வாக்களித்து
இந்திரனுக்கு)   அந்த   வரத்தைக்   கொடுத்து;   ஆங்கு ஏன்று  -
அப்பொழுதே (அச்செயலை) மேற்கொண்டு; எடுத்த சிலையினனாய் -
கையில்  வில்லைப்  பிடித்தவனாக;  இகல் புரிந்த - (அசுரர்களோடு)
போர்  செய்த;  இவர்  குலத்து  - இந்தக்  குமாரர் தோன்றிய இரவி
வம்சத்திலே  பிறந்த;  ஓர்  தோன்றலை  -  புரஞ்சயன் என்னும் ஓர்
அரசனை;  பண்டு  -  முன்  காலத்தில்;  விடை ஏறு ஆய்- காளை
வடிவமாய்;   சுமந்தானும்   -  (அப்பொழுது)   சுமந்து  நின்றவனும்;
இந்திரன் காண்
- தேவர்தலைவனான அந்த இந்திரனே யாவான்.  

ககுத்தன்:     முன் காலத்தில் தேவர்க்கும்   அசுரர்க்கும்  நிகழ்ந்த
போரில்  தேவர்கள்  தோற்றார்கள். அதனால் தேவர்கள்  திருமாலிடம்
முறையிட.    அவனும்      அவர்களை   நோக்கி   ‘நான்   பூமியில்
இட்சுவாகுவின்  மகனான  சசாதன்  மகனாகப்    புரஞ்சயன்  என்னும்
மன்னனாகத்  தோன்றி  அந்த  அசுரர்களை   அழிப்பேன்’  என்றான்.
தேவர்கள் அவனிடம் சென்று கூற. அப் புரஞ்சயனும் ‘இந்தி