பக்கம் எண் :

406பால காண்டம்  

ரன்     வாகனமாக    எனக்கு    அமைந்தால்   அவன்மேல்  ஏறிப்
போர்செய்து    அசுரரை   மாய்ப்பேன்’   என்றான்.     அப்பொழுது
இந்திரனும்  தடைசொல்லாது  காளை  வடிவம்    எடுக்கப்  புரஞ்சயன்
அதிலேறிப்  போர்  செய்து    அசுரரை  அழித்தான்  எருது வடிவான
இந்திரனின்   ‘ககுத்’   எனப்படும்    முசுப்பில்  ஏறி  இருந்தமையால்
‘ககுத்தன்’ எனப்பட்டான்.                                     3
   

640.

‘அரைசன் அவன் பின்னோரை.
   என்னாலும் அளப்பு அரிதால்;
உரை குறுக நிமிர் கீர்த்தி
   இவர் குலத்தோன் ஒருவன்காண்-
நரை திரை மூப்பு இவை மாற்றி
   இந்திரனும் நந்தாமல்.
குரை கடலை நெடு வரையால்
   கடைந்து. அமுது கொடுத்தானும்.

 
  

அரைசன்    - அந்தக் ககுத்த மன்னனது; அவன் பின்னோரை -
குலத்தில்     பின்பு    தோன்றிய    அரசர்களை;    அளப்பு   -
(இத்தன்மையுடையவர்  என்று)  அளவிட்டுச் சொல்லுதல்;  என்னாலும்
அரிது  
-  என்னாலும் முடியாது; நரை - முடி வெளுத்தலும்; திரை -
உடம்பின்  தோல்  சுருங்குதலும்;  மூப்பு - (இவற்றிற்குக் காரணமான)
முதுமைத்  தன்மையும்;  இவை  - என்னும் இவற்றை; மாற்றி - நீக்கி;
இந்திரனும்
- தேவேந்திரனும்;  (மற்ற  தேவர்களும்);   நந்தாமல் -
சாகாதபடி;  குரைகடலை - ஒலிக்கின்ற பாற்கடலை; நெடுவரையால் -
பெரிய  (மந்தர) மலையால்;  கடைந்து   -   
கடைந்து;   அமுது
கொடுத்தானும்  -  
(அதிலிருந்து) தேவர்களுக்கு அமுதத்தை எடுத்துக்
கொடுத்தவனும்;  உரை  குறுக  - (மொழியில்) சொற்கள் குறையும்படி.
நிமிர் கீர்த்தி
- மிகுதியான புகழையுடைய; இவர் குலத்தோன் - இந்த
மைந்தர்களது  குலத்தில்  உதித்த;  ஒருவன்  காண்  - ஓர் அரசனே
ஆவான்.

உரை     குறுக   நிமிர்கீர்த்தி - இக்    குமாரர்களின் பெரும்புகழ்
சொல்லுக்கு  அடங்காது.  அதாவது   இவர்களின்  புகழைக் கூறுவதற்கு
வேண்டிய   சொற்கள்  உலகிலே  இல்லை    என்பது.  இந்திரனும்  -
எச்சவும்மை. உயர்வு சிறப்பும்மை.                              4
   

641.

‘கருதல் அரும் பெருங் குணத்தோர்.
   இவர் முதலோர் கணக்கு இறந்தோர்
திரி புவனம் முழுது ஆண்டு
   சுடர் நேமி செல நின்றோர்;-
பொருது உறை சேர் வேலினாய்!-
   புலிப் போத்தும் புல்வாயும்