பக்கம் எண் :

408பால காண்டம்  

முடியும்     -  பொருந்திய  நவரத்தின    முடியும்;    ஆரமும்  -
மாலைகளும்;  வாளொடு  மின்ன  -  ஒளியோடு  மின்னுமாறு;  வில்
பிடித்த
- கையில் வில்லேந்திய; அறம் என்ன - தருமதேவதை போல;
ஒரு  தனியே திரிந்து
- தான் ஒருவனாகவே (வாளும் கையுமாக வான்
உலகு  சென்று)  சஞ்சரித்து;  அமராபதி  காத்தோன்  - (இந்திரனது)
அமராவதி நகரத்தைக் காத்து நின்றான் (முசுகுந்தன்).  

முசுகுந்தன்:     வானுலகில் அசுரர்கள் தேவர்களோடு போர் செய்து
அவர்களைத்   துரத்தினர்;   இந்திரன்    முதலான  தேவர்கள்  இந்த
அரசனை அடைந்து உதவ  வேண்டினர். அதனைக்  கேட்ட  மன்னவன்
வான்  சென்று  அசுரர்களைக்  கொன்று  முருகன் சேனைத்தலைவனாக
வருகின்ற வரையிலும்  வானுலகைக்   காத்திருந்தான். வில்பிடித்த அறம்
- இல் பொருள் உவமை.                                      6
   

643.

‘இன் உயிர்க்கும் இன் உயிராய்
   இரு நிலம் காத்தார் என்று
பொன் உயிர்க்கும் கழலவரை
   யாம் போலும். புகழ்கிற்பாம்?-
மின் உயிர்க்கும் நெடு வேலாய்! -
   இவர் குலத்தோன். மென் புறவின்
மன் உயிர்க்கு. தன் உயிரை
   மாறாக வழங்கினனால்!
 

மின் உயிர்க்கும்- மின்னல்போல ஒளி விடுகின்ற; நெடுவேலாய் -
நீண்ட வேல்  தாங்கிய சனகனே;  பொன்  உயிர்க்கும் கழலவரை -
விளங்கும்  வீரக்  கழலைப்  பூண்ட  இக்குலத்து   மன்னர்களை; இன்
உயிர்க்கும்  
- (உலகிலுள்ள)  இனிமையான உயிர்கள் எல்லாவற்றிற்கும்;
இன் உயிராய்
- தாம் இனிய உயிர் ஆக இருந்து; இரு நிலம் காத்தார்
-  பெரிய  நிலவுலகை  அரசாண்டார்கள்;  என்று  - என்று சொல்லி;
புகழ்கிற்பாம்  
- புகழவல்லோம்; யாம் போலும் - நாம்தான் போலும்!
(புகழ்   நம்மால்  முடியாது;  ஏனெனில்);  இவர்குலத்தோன்  -  இக்
குமாரர்களின் குலத்தில் தோன்றிய அரசன் ஒருவன்; மென் பறவை -
மெல்லியபறவை  ஒன்றின்;  மன் உயிர்க்கு -
நிலைபெற்ற உயிர்க்கு;
மாறாக -  ஈடாக; தன் உயிரை -
தனது ஆருயிரை; வழங்கினன் -
கொடுத்தான்.  

இங்குக்     கூறப்   பெற்றவன் சிபி மன்னவன். இவன் நூறு அசுவ
மேதயாகம்    புரிந்து    நான்காம்    மனுவந்தரத்தில்    இந்திரனாக
அமர்ந்திருந்தவன்.  போலும் - ஒப்பில் போலி -  எதிர்மறைப் பொருள்
தந்தது.                                                    7