பக்கம் எண் :

  குலமுறை கிளைத்து படலம்409

644.

‘இடறு ஓட்ட. இன நெடிய
   வரை உருட்டி. இவ் உலகம்
திடல். தோட்டம். எனக் கிடந்தது
   என இரங்கி. - தெவ் வேந்தர்
உடல் தோட்ட நெடு வேலாய்!-
   இவர் குலத்தோர். உவரி நீர்க்
கடல் தோட்டார்எனின். வேறு ஓர்
   கட்டுரையும் வேண்டுமோ?
 

தெவ் வேந்தர்- பகை அரசர்களது; உடல் தோட்ட- உடல்களைத்
துளைத்த; நெடுவேலாய் - நீண்ட வேலினை உடைய மன்னனே!;இவர்
குலத்தோர்  
-  இம்  மைந்தர்களின்  குலத்து  அரசர்கள்; இரங்கி -
(தங்கள்  தந்தையின் அசுவமேதக் குதிரை  காணாமல்  போக) வருந்தி;
நெடிய வதை  
- பெரிய மலைகளை; இடறு ஓட்டம் இனம் - காலால்
இடறத்  தக்க  தேங்காய்  ஓடுகளைப்  போல;  உருட்டி - (வெளியே)
புரட்டித்  தள்ளி;  இவ் உலகம் - இந்த நிலவுலகம்; திடல் கோட்டம்
என  
-  திட்டாகவும்  மேடாகவும்;  கிடக்கும்  வகை - இருக்கும்படி;
உவரிநீர்
-  உப்புச் சுவை மிக்க நீரைக் கொண்ட; கடல் தோட்டார்-
கடலை(த் தத்தம் வலிமையால்) தோண்டினார்கள்;  எனின் - என்றால்;
வேறு   ஓர்   கட்டுரையும் -
 (இக்  குலத்தின்  பெருமைக்கு)  வேறு
நிகழ்ச்சியாக  எடுத்துச் சொல்ல ஓர் உறுதி மொழியும்; வேண்டுமோ -
வேண்டுமா? (வேண்டா).  

இதில்  சொல்லப்பட்டவர்   சகர   குமாரர்.  இவர்கள்  தோண்டின
பள்ளமே கடலாயிற்று. திடல் தோட்டம் - ஒரு பொருட் பன்மொழி.   8
   

645.

‘தூ நின்ற சுடர் வேலாய்!
   அனந்தனுக்கும் சொலற்கு அரிதேல்.
யான் இன்று புகழ்ந்துரைத்தற்கு
   எளிதோ? ஏடு அவிழ் கொன்றைப்
பூ நின்ற மவுலியையும்
   புக்கு அளைந்த புனற் கங்கை.
வான்நின்று கெணர்ந்தானும்
   இவர் குலத்து ஓர் மன்னவன்காண்!
 

தூநின்ற  சுடர்- (பகைவரின்) தசை படிந்த ஒளிமிக்க; வேலோய்-
வேலையுடைய மன்னவனே!;  அனந்தனுக்கும் - (ஆயிரம் முகமுடைய)
ஆதிசேடனுக்கும்; கொலற்கு அரிது ஏல் - (இவர்