பக்கம் எண் :

414பால காண்டம்  

‘’முலைக் கோட்டு விலங்கு’ என்று.
   தொடர்ந்து அணுகி முன் நின்ற
கலைக் கோட்டுப் பெயர் முனியால்.
   துயர் நீங்கக் கருதினான்;
 

சிலைக் கோட்டு நுதல்- வில்லைப் போல வளைந்த நெற்றியையும்;
குதலைச்  செங்கனிவாய்  
-  (குழந்தைகளின்)  மழலை போல இனிய
சொற்களைப்   பேசுகின்ற   சிவந்த    கொவ்வைப்    பழம்  போன்ற
வாயையும்;  கரு  நெடுங்கண் - கரிய நீண்ட கண்களையும்; விலைக்கு
ஓட்டும்  
-  விலைப்  பொருளுக்குத் தருகின்ற;  பேரல்குல் - பெரிய
அல்குலையும்; மின் நுடங்கும் - மின்னல் கொடிபோலத்  துவளுகின்ற;
இடையாரை    
-    சின்ன    இடையையும்   உடைய   வேசியரை;
முலைக்கோட்டு
- தனங்களாகிய கொம்புகளையுடைய; விலங்கு என்று
-   சில  மிருகங்கள்  என்று  கருதி;  தொடர்ந்து  அணுகி  -  தன்
ஆச்சிரமத்திலிருந்து  அவ் விலைமாதர்களைத் தொடர்ந்து;  முன்நின்ற
-  (உரோம பாத மன்னது) முன்னே வந்து சேர்ந்த; கலைக்  கோட்டுப்
பெயர்   
-  கலைக்  கோட்டு  முனிவன்  என்னும்  பெயர்  தாங்கிய;
முனியால்   
- முனிவனைக்  கண்டு;  துயர்  நீங்கக்  கருதினான் -
(குழந்தைப்  பேறு  இல்லாத)  தன்  துயரத்தைப்  போக்கிக்  கொள்ள
நினைந்தான்.

கலைக்கோட்டு  முனிவன்  -   தலையில்   கொம்பு   உடையவன்.
ருசியசிருங்கர் - வடமொழி வழக்கு.                            15
 

652.“தார் காத்த நறுங் குஞ்சித்
   தனயர்கள். என் தவம் இன்மை.
வார் காத்த வன முலையார்
   மணி வயிறு வாய்த்திலரால்;
நீர் காத்த கடல் புடை சூழ்
   நிலம் காத்தேன்; என்னின். பின்.
பார் காத்தற்கு உரியாரைப்
   பணி. நீ” என்று அடி பணிந்தான்.

 

என்    தவம்    இன்மை  -  (முற்பிறப்பில்)   நான்   நற்றவம்
செய்யாமையால்;  தார்  காத்த  - பூமாலை யணிகின்ற; நறுங்குஞ்சி -
நறுமணமுள்ள  முடியை  உடைய;  தனயர்கள்  -  மைந்தர்கள்; வார்
காத்த  வனமுலையார்  
-  கச்சு அணிந்த அழகிய தனங்களையுடைய
என் மனைவியரின்; மணி வயிறு வாய்த்திலர் - அழகிய கருப்பத்தி(ல்)
தோன்றவில்லை -  ஆல் - ஆதலால்; நீர் காத்த கடல் காத்த - நீர்
நிறைந்த   கடலால்  சூழப்பட்ட;   நிலம்  காத்தேன்  -  நிலவுலகம்
முழுவதையும்  ஆட்சி  புரிந்த; என்னின்பின் - எனக்குப் பின்பு; பார்
காத்