சிலைக் கோட்டு நுதல்- வில்லைப் போல வளைந்த நெற்றியையும்; குதலைச் செங்கனிவாய் - (குழந்தைகளின்) மழலை போல இனிய சொற்களைப் பேசுகின்ற சிவந்த கொவ்வைப் பழம் போன்ற வாயையும்; கரு நெடுங்கண் - கரிய நீண்ட கண்களையும்; விலைக்கு ஓட்டும் - விலைப் பொருளுக்குத் தருகின்ற; பேரல்குல் - பெரிய அல்குலையும்; மின் நுடங்கும் - மின்னல் கொடிபோலத் துவளுகின்ற; இடையாரை - சின்ன இடையையும் உடைய வேசியரை; முலைக்கோட்டு - தனங்களாகிய கொம்புகளையுடைய; விலங்கு என்று - சில மிருகங்கள் என்று கருதி; தொடர்ந்து அணுகி - தன் ஆச்சிரமத்திலிருந்து அவ் விலைமாதர்களைத் தொடர்ந்து; முன்நின்ற - (உரோம பாத மன்னது) முன்னே வந்து சேர்ந்த; கலைக் கோட்டுப் பெயர் - கலைக் கோட்டு முனிவன் என்னும் பெயர் தாங்கிய; முனியால் - முனிவனைக் கண்டு; துயர் நீங்கக் கருதினான் - (குழந்தைப் பேறு இல்லாத) தன் துயரத்தைப் போக்கிக் கொள்ள நினைந்தான். கலைக்கோட்டு முனிவன் - தலையில் கொம்பு உடையவன். ருசியசிருங்கர் - வடமொழி வழக்கு. 15 |