பக்கம் எண் :

416பால காண்டம்  

பூதகணத்து அரசு ஏந்தி.
   அனல்நின்றும் போந்ததால்.

 

காதலரைத்   தரும்-  (அவ்வாறே மாமன்னரும்)  மைந்தர்களைக்
கொடுத்திடும்; வேள்விக்கு  உரிய எலாம் - பெரிய வேள்விக்கு உரிய
பொருள்கள்   எல்லாவற்றையும்;   கடிது  அமைப்ப  -  விரைவாகக்
கொண்டுவந்து  சேர்க்க;  மற்று - பின்னர்; மாதவரில் பெரியோனும்-
பெருந்  தவமுடைய முனிவர்களில் சிறந்த  கலைக்கோட்டு  முனிவனும்;
அதனை  முற்றுவித்தான்  
- அந்த வேள்வியைச் செய்து  முடித்தான்;
அனல்  நின்றும்  
- அந்த ஓம நெருப்பிலிருந்தும்; ஓர் பூத கணத்து
அரசு  
- பூதக் கூட்டங்களுக்குத் தலைவனான  சிறந்த ஒரு பூதமானது;
சோதி  மணி  
- ஒளிமிக்க அழகிய; பொன்கலத்து - பொன்தட்டிலே;
சுதை அனைய  வெண்சோறு  
-  அமுதம் போன்ற வெண்ணிறமான
பயசத்தை; ஏந்தி - எடுத்துக் கொண்டு; போந்தது - வெளிப்பட்டது.18
 

655.‘பொன்னின் மணிப் பரிகலத்தில்
   புறப்பட்ட இன் அமுதை.
பன்னு மறைப்பொருள் உணர்ந்த
   பெரியோன்தன் பணியினால்.
தன் அனைய நிறை குணத்துத்
   தசரதனும். வரன்முறையால்.
நல் நுதலார் மூவருக்கும்.
   நாலு கூறிட்டு. அளித்தான்.

 

பொன்னின்   மணி- பொன்னாலாகிய அழகிய; பரி கலத்தில் -
பாத்திரத்துடன்;  புறப்பட்ட  இன்  அமுதை  -  வெளிப்பட்ட அந்த
இனிய    உணவை;   பன்னு   மறைப்   பொருள்   -  சிறப்பாகச்
சொல்லப்படுகின்ற     வேதங்களின்     பொருள்களை;    உணர்ந்த
பெரியோன்தன்  
-  அறிந்த  (அறிவொழுக்கங்களில் மேம்பட்ட)  அக்
கலைகோட்டு முனிவனது; பணியினால் - கட்டளையால்; தன் அனைய
- தனக்குத் தானே நிகரான; நிறைகுணத்து - நிறைந்த  நற்பண்புகளைக்
கொண்ட;  தசரதனும்  - தசரத மன்னனும்; வரன்முறையால் - வரிசை
முறைப்படி;  நல்  நுதலார்  மூவருக்கும்  - அழகான  நெற்றியுடைய
(கோசலை  முதலான) பட்டத்தரசிகள் மூவருக்கும்; நாலு கூறு இட்டு -
நான்கு பங்காக்கி; அளித்தான் - கொடுத்தான்

மூன்கு     பங்குகளை முறையே கோசலை.  கைகேயி.   சுமித்திரை
ஆகியோர்க்குக்  கொடுத்து  எஞ்சிய  நான்காம்  பங்கினை    மீண்டும்
சுமத்திரைக்கு அளித்தான் என்ப.                              19