பக்கம் எண் :

  குலமுறை கிளைத்து படலம்417

656.‘விரிந்திடு தீவினை செய்த
   வெவ்விய தீவினையாலும்.
அருங் கடை இல் மறை அறைந்த
   அறம் செய்த அறத்தாலும்.
இருங் கடகக் கரதலத்து இவ்
   எழுத அரிய திருமேனிக்
கருங்கடலைச் செங் கனி வாய்க்
   கவுசலை என்பாள் பயந்தாள்.
 

விரிந்திடு தீவினை- (உலகில்) பரவிய பாவங்கள்;செய்த வெவ்விய
-  பண்ணின  கொடிய;  தீவினையாலும் - பாவச் செயலாலும்; அருங்
கடை  இல்
- (அறிவதற்கு) அரிய எல்லையில்லாத; மறை அறைந்த -
வேதங்களில்  சொல்லப்பட்டுள்ள; அறம் செய்த - தருமங்கள் செய்த;
அறத்தலும்
- தருமத்தாலும்; செங்கனிவாய் - சிவந்த கொவ்வைக் கனி
போன்ற  வாயையுடைய; கவுசலை என்பாள் - (மூத்தவளான) கவுசலை
எனப்படுபவள்;  இருங்  கடகக்  கரதலத்து - பெரிய கடகம் என்னும்
அணி  அணிந்த கைகளையும்; எழுது அரிய திருமேனி - சித்திரத்தில்
எழுத  முடியாத  அழகிய உடலையுமுடைய; இக் கருங்கடலை - கடல்
போன்ற கரிய நிறமுடைய இந்த இராமனை; பயந்தாள் - பெற்றாள்.

பாவம்     அழியவும். புண்ணியம் வளரவும் இராமன்   இவ்வுலகில்
அவதாரம்  எடுத்தான்   என்பதை   ‘தீவினை  செய்த  தீவினையாலும்
அறம்  செய்த  அறத்தாலும் பயந்தாள்’  எனக்  குறிப்பிட்டார். கடல் -
உவமையாகு பெயர்.                                        20
 

657.‘தள்ள அரிய பெரு நீதித்
   தனி ஆறு புக மண்டும்
பள்ளம் எனும் தகையானை.
   பரதன் எனும் பெயரானை.
எள்ள அரிய குணத்தாலும்
   எழிலாலும் இவ் இருந்த
வள்ளலையே அனையானை.
   கேகயர்கோன் மகள் பயந்தாள்.

 

தள்ள  அரிய- (அறிந்தவர்களால்) விலக்கமுடியாத; பெரு நீதி -
சிறந்த  நீதிகளாகிய;  தனி  ஆறு  - ஒப்பில்லாத பெருநதிகள்; புக -
(தன்னிடம்)  வந்து  சேர்வதால்;  மண்டும்  -  நிறைந்துள்ள; பள்ளம்
எனும்  
-  ஆழமான கடலென்று சொல்லத்தக்க; தகையானை - நல்ல
பண்புகளைக்    கொண்டவனும்;   எள்ள   அரிய   -   (யாராலும்)
இகழமுடியாத; குணத்தாலும் - நற்குணங்களாலும்; எழிலாலும் -