பக்கம் எண் :

  குலமுறை கிளைத்து படலம்419

சிலை ஆயும் தனு வேதம்
   தெவ்வரைப்போல் பணி செய்ய.
கலை ஆழிக் கதிர்த் திங்கள்
உதயத்தில் கலித்து ஓங்கும்
   அலை ஆழி என வளர்ந்தார் -
மறை நான்கும் அனையார்கள்.

 

மறை    நான்கும்  அனையார்கள்-  நான்கு   வேதங்களையும்
ஒத்துள்ள  அந்தக்  குமாரர் நால்வரும்;  தலையாய  - முதன்மையான;
பேருணர்வின்  
-  செய்திகளையெல்லாம்   அறியக்  கூடிய  முதிர்ந்த
அறிவில்;   கலை   மகட்குத்   தலைவராய்   -   கலைமகளுக்கும்
மேம்பட்டவராய்;   சிலை   ஆயும்   -  வில்  திறத்தை  ஆராய்ந்து
கூறுவதான;  தனுவேதம்  -  தனுர்  வேதமானது; தெவ்வரைப் போல்
பணி செய்ய
- (தம்முடைய) பகைவர் (தோற்றுத்  தம்மிடம்  குற்றேவல்
செய்வது)  போலத்  தமக்குக்  குற்றேவல்  செய்யுமாறு; கலை  ஆழிக்
கதிர்த்  திங்கள்
- கலைகள் நிறைந்த வட்டவடிவமான ஒளியையுடைய
முழு நிலவின்; உதயத்தில் கலித்து- உதய காலத்தில் ஒலித்து; ஓங்கும்
-  பொங்குகின்ற;  அலை  ஆழியென - அலைகளையுடைய கடல்கள்
போல; வளர்ந்தார் - வளர்ந்து வந்தார்கள்.

மறை     நான்கும்  அனையார்கள் - அறம் முதலான நாற்பொருட்
பயன்களையும்   அளிக்கும்   தன்மையர்   எனலாம்.  தம்  ஆசிரியர்
முன்னிலையில்  தம்  அறிவாகிய அலைகள்  பொங்கிக் காணக் கலைப்
பயிற்சி   பெற்று   அக்குமாரர்   வளர்ந்தனர்    என்பதைத்  திங்கள்
உதயத்தில்    கலித்தோங்கும்   அலையாழி     என்னும்   தொடரால்
குறித்தார்.                                                23
 

660.‘திறையோடும் அரசு இறைஞ்சும்
   செறி கழற் கால் தசரதன் ஆம்
பொறையோடும் தொடர் மனத்தான்
   புதல்வர் எனும் பெயரேகாண்!-
உறை ஓடும் நெடு வேலாய்!
   உபநயன விதி முடித்து.
மறை ஓதுவித்து. இவரை
   வளர்த்தானும் வசிட்டன்காண்.

 

உறை    ஓடும்- (பகைவரை வென்று) உறையில் அடங்கும்; நெடு
வேலாய்
-  நீண்ட  வேலினை  உடையவனே!; திறையோடும் - (இம்
மைந்தர்களுக்கு)   திறைப்   பொருள்கள்   கொண்டு   வந்து;  அரசு
இறைஞ்சும்
- எல்லா அரசர்களும் வணங்கக் கூடிய; செறி கழல் கால்
- நெருங்கிய வீரக்கழல்  பூண்ட அடிகளையுடைய; தசரதன் ஆம்- தச