ஐயா - மன்னவனே!; அலை உருவம் - அலைகளின் வடிவமாகக் காட்சியளிக்கின்ற; கடல் உருவத்து - கடல்போன்ற கரிய திருமேனியுடைய; ஆண் தகைதன் - ஆண்மைத் தன்மையுள்ள இந்த இராமனது; நீண்டு உயர்ந்த - நெடிதாக உயர்ந்துள்ள; நிலை உருவப்புயம் - நிலையான அழகுடைய தோள்களின்; வலியை - ஆற்றலை; நீ உருவ நோக்கு - நீ உற்றுப் பார்ப்பாயாக!; ஒருவாளி- (இராமனது தோள் வலியால் எய்யப்பட்ட) அம்பு ஒன்றுதான்; உலை உருவம் - உலைக் களத்திலுள்ள சிவந்த; கனல் உமிழ் கண் - நெருப்பைக் கக்குகின்ற கண்களையுடைய; தாடகை தன் - தாடகையினது; உரன் உருவி - மார்பைத் துளைத்து; மலை உருவி - (அடுத்து நின்ற); மலைகளையும் துளைத்து; மலை உருவி - பல மரங்களையும் துளைத்து; மண் உருவிற்று - (எதிரே வேறு பொருள் இல்லாமையால்) நிலத்தையும் துளைத்துச் சென்றது. ‘இராமனைச் சிறுவன் என்று கருதாதே’ இவனது ஓர் அம்பு செய்த செயலால் இவனது வீரம் எத்தகையது என்று ஆராய்ந்து பார்’ என்கிறான் முனிவன். அணி - திரிபு என்னும் சொல்லணி. பல பொருள்களையும் துளைக்குமாறு அம்பு எய்யும் வில் திறம் ‘வல்வில்’ என்ற அடையால் புலப்படும். 26 |