ஐயா - அரசே!; அயற்கேயும் அறிவு அரிய - பிரமனாலும் அறிய முடியாத இராமனின் பெருமைகளை; ஆய்ந்து ஏற உணர் - ஆராய்ந்து முழுவதும் உணர்க; உலகு அனைத்தும் - உலகங்கள் எல்லாவற்றையும்; கடலோடும் - கடல்களுடனும்; மலையோடும் - மலைகளுடனும்; காய்ந்து - எரிந்து; தீய்ந்து ஏற - கரிந்து போகும்படி; சுடுகிற்கும் படைக்கலங்கள் - எரிக்கவல்ல படைக்கருவிகள்; செய் தவத்தால் - செய்த தவப் பயனால்; ஈந்தேனும் - பெற்றுக் கொடுத்த நானும்; மனம் உட்க - நெஞ்சு நடுங்குமாறு; இவற்கு ஏவல் செய்குன - இந்த இராமனுக்கு குற்றேவல் செய்து நிற்கின்றன. ‘ஈந்தேனும் மனம் உட்க’ என்றது தன்னிடத்திலும் இராமனிடம் ஆயுதங்கள் மிக்க அன்புபூண்டு பணி செய்கின்றன’ என்பதாம் ஆல். ஏ - அசைகள். 28 |