பக்கம் எண் :

422பால காண்டம்  

-  (எனது வேள்விக்கு இடையூறு செய்த  அரக்கர்களின்)   தலைகளின்
குவியல்; பொருப்பு  என்ன  -  மலைகளைப்  போல; உக்கனவோ-
அறுபட்டு  விழுந்து  கீழே  சிதறியவற்றிற்கோ;  முடிவு இல்லை - ஓர்
அளவே  இல்லை; அங்கு- அப்போது;  (அந்த இடத்தில்);   அரக்கி
மக்களில்   ஒருவன்   -   
அத்  தாடகையின்  மைந்தர்  இருவருள்
ஒருவனான  சுபாகு;  ஓர்  அம்பினொடும் - (இராமன் எறிந்த) அம்பு
தைத்த மாத்திரத்தில்; போய் வான் புக்கான் - உயிர் நீத்து வானுலகம்
சேர்ந்தான்;  மற்றையவன்  -  மற்றொரு  மைந்தனான மாரீசன்; புக்க
இடம்   -   
(இவன்   எய்த  அம்பால்)  போய்  விழுந்த  இடத்தை;
அறிந்திலேன் -
யான் அறியவில்லை (இவ்வாறு இடையூறு  அகப்பட்ட
பின்பு);  என் வினை முடித்து - என் வேள்வியை நிறைவாகச் செய்து
முடித்து; போந்தனென் - (இங்கே) வந்தேன்.

பொருப்பு:  இந்திரனால்  சிறகு  அரியப்பட்டு  மண்ணில்  விழுந்த
மலைகள்.                                                 27

                                        இராமனது வில்லாற்றல்
 
664.‘ஆய்ந்து ஏற உணர் - ஐய!-
   அயற்கேயும் அறிவு அரிய;
காய்ந்து ஏவினன். உலகு அனைத்தும்
   கடலோடும் மலையோடும்
தீய்ந்து ஏறச் சுடுகிற்கும்
   படைக் கலங்கள். செய் தவத்தால்
ஈந்தேனும் மனம் உட்க.
   இவற்கு ஏவல் செய்குனவால்.

 
  

ஐயா - அரசே!; அயற்கேயும் அறிவு அரிய - பிரமனாலும் அறிய
முடியாத   இராமனின்   பெருமைகளை;   ஆய்ந்து   ஏற உணர் -
ஆராய்ந்து  முழுவதும்  உணர்க;  உலகு  அனைத்தும் - உலகங்கள்
எல்லாவற்றையும்;  கடலோடும் -  கடல்களுடனும்;  மலையோடும் -
மலைகளுடனும்; காய்ந்து - எரிந்து; தீய்ந்து ஏற - கரிந்து போகும்படி;
சுடுகிற்கும்  படைக்கலங்கள்  
- எரிக்கவல்ல  படைக்கருவிகள்; செய்
தவத்தால்  
- செய்த தவப் பயனால்; ஈந்தேனும் - பெற்றுக் கொடுத்த
நானும்; மனம் உட்க - நெஞ்சு நடுங்குமாறு; இவற்கு ஏவல் செய்குன
- இந்த இராமனுக்கு குற்றேவல் செய்து நிற்கின்றன.  

‘ஈந்தேனும்     மனம் உட்க’  என்றது தன்னிடத்திலும் இராமனிடம்
ஆயுதங்கள்  மிக்க அன்புபூண்டு பணி  செய்கின்றன’  என்பதாம் ஆல்.
ஏ - அசைகள்.                                             28