பக்கம் எண் :

  குலமுறை கிளைத்து படலம்423

                      அகலிகைக்கு முன்னை உருத் தந்த பெருமை
 

665.

‘கோதமன்தன் பன்னிக்க
   முன்னை உருக் கொடுத்தது. இவன்.
போது நின்றது எனப்பொலிந்த.
   பொலங் கழற் கால் பொடி கண்டாய்;
காதல் என்தன் உயிர்மேலும்
   இக் கரியோன்பால் உண்டால்;
ஈது. இவன்தன் வரலாறும்.
   புய வலியும்’ என உரைத்தான்.

 
  

இவன்    - இந்த இராமனது; போது நின்றது என - செந்தாமரை
(வாடி   வதங்காமல்  எப்பொழுதும்  ஒரு  தன்மையாகப்    பொருந்தி
நின்றது) என்னுமாறு; பொலிந்த - விளங்குகின்றன; பொலன் கழற்கால்
-  பொற்கழலை  யணிந்த  திருவடியின்; பொடி - தூளியே; கோதமன்
தன்  பன்னிக்கு  
- கௌதம முனிவனின் மனைவியான  அகலிகைக்கு;
முன்னை  உரு
- பழைய வடிவத்தை; கொடுத்தது கண்டாய் - (சாபம்
நீக்கி)  தந்து  அருளியதைக்  காண்பாய்;  என்தன்  உயிர் மேலும் -
எனக்கு (எனது) உயிரிடத்து உள்ளதைக் காட்டிலும்;  இக்கரியோன்பால்
-  கரிய  இந்த  இராமனிடத்தில்;  காதல் உண்டு - அன்பு மிகுதியாக
உள்ளது; இவன்தன் வரலாறும் - இந்த இராமனது தூய வரலாறும்; புய
வலியும்
- தோள் ஆற்றலும்; ஈது என - இதுவாம் என்று; உரைத்தான்
-  (கோசிக  முனிவன்  சனகனுக்குத்  தசரதன்  மகனான  இராமனது
பண்புகளைக்) கூறி முடித்தான்.

இராமனது     திருவடி கூடப் பெருமைமிக்கது   என்றால்   இவன்
திருமேனியின்  பெருமை  கூறல்  வேண்டா  என்பது   இராமன்: கரிய
நிறம்   உடையவன்.   அதனால்  இராமனைக்   ‘கரியோன்’  என்றார்.
‘இவ்வளவு பெருமைமிக்க இராமனிடம் என்  உயிரினும்  எனக்கு அன்பு
மிகுதியாக   உள்ளது’  என்றான்  விசுவாமித்திரன்    பன்னி  -  பத்நீ
என்பதன்  திரிபு.  காதல்  -  பத்திமை.  ‘காதலால்  நெஞ்சம்   அன்பு
கலந்திலேன்’ - திருமாலை - 26.                              29