தகு பண்புகளையுடைய இக்குமாரன்; நொய்தின் - விரைவாக; வில் ஏற்றுமேல் - சிவ தனுசை வளைத்து நாண் ஏற்றுவானேயானால்; இடர்க்கடல் ஏற்றும் - (என்னையும்) துயரக் கடலிலிருந்து கரையேற்றினவனாவான்; நங்கையும் - என் மகளான சீதையும்; நோற்றனள் - (முன் செய்த) தவப்பேற்றைப் பெற்றவளாவாள்; என்றனன் - என்று கூறினான். ‘முனிவரே! இம் மைந்தரின் குலவரலாற்றோடு தோள்வலிமையையும் கூறினீர். உமது வார்த்தைக்கு மறமாற்றம் சொல்வேனோ? ஆனால் பெண்ணின் திருமணத்தின் பொருட்டு வைத்த இந்த வில்லை இதுவரை எந்த வீரரும் வளைத்து நாணேற்றினாரில்லை;அதனால் என் மகள் திருமணமும் நடைபெறாமல் என் மனம் கலங்கியுள்ளது. இச் சிவ தனுசை இச் சிறுவன் நாணேற்றினால் என் துன்பமும் நீங்கும்; இச் சீதையும் தவப் பேற்றைப் பெற்றவளாவாள் என்றான். எவராலும் வளைக்கமுடியாமல் இருந்ததால் இதனை ‘மாயவில்’ என்றார். 1 ஏவலர் வில்லினை அவைக்குக் கொண்டுவரல் |