நெடுநில மகள் - பெரிய இப் பூமிதேவி; முதுகு ஆற்ற - (நெடுங்காலமாக அந்த வில்லைத் தாங்கியதனால் ஏற்பட்ட) முதுகின் நோவை ஆற்றிக் கொள்ளவும்; நின்று உயர் - நிலைபெற்று ஓங்கிய; தடம் நிமிர் வடவரைதானும் - பெரிய மேரு மலையும்; நாண் உற- (வில்லின் தோற்றம் கண்டு) வெட்கம் அடையவும்; கடல் புரை திருநகர் - கடல்போல் பரந்துபட்ட மக்கள்; உலகு எங்கணும்- உலகத்திலே எங்கும்; இடம் இலை என - இடம் இல்லை என்று சொல்லும்படி; வந்தது - (அச்சிவ) வில்லானது (சுமக்கப்பட்டு) வந்தது. உலகத்தவர் திரண்டு காணுமாறு அச்சிவ வில் ஆயிரக் கணக்கான பணியாளரால் தாங்கப்பட்டு வந்தது. நெடுங்காலமாகச் சிவதனுசைத் தாங்கியதனால் நோவுற்ற பூமிக்கு இப்போது இளைப்பாற இடம் ஏற்பட்டது. நகர் - ஆகு பெயர். 4 வில்லினைக் கண்டோர் விளம்பியமை |